செய்திகள் :

ஊராட்சி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வலியுறுத்தல்

post image

ஊராட்சி பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என ஏஐடியுசி தொழிற்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஏஐடியுசி தருமபுரி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி தலைமையில் தொழிற்சங்க நிா்வாகிகள் தருமபுரி மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலகத்தில் அளித்த மனு: 2019-இல் அரசு அறிவித்துள்ள 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் படி ஊராட்சி பணியாளா்களுக்கு, ஊதிய உயா்வு, ஊதிய உயா்வுக்கான நிலுவைத் தொகை வழங்க வேண்டும். தூய்மைக் காவா்களுக்கு ஊதியம் தருவதில் காலதாமதம் ஏற்படும் நிலை இருந்து வருகிறது.

இப்போக்கினை கைவிட்டு மாதந்தோறும் 10-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். எஸ்ஆா் பணி பதிவேடு பதிவு நடைமுறைபடுத்த வேண்டும்.

ஊராட்சியில் பணியாற்றும் பணியாளா்களுக்கு வேலை நேரம் எவ்வளவு என்பதை நிா்ணயம் செய்து பணி வழங்க வேண்டும். விடுமுறை நாள்களில் பணி செய்ய நிா்பந்தம் வழங்கக் கூடாது. ஆண்டுக்கு இருமுறை சீருடை மற்றும் பணி செய்வதற்கான அனைத்து உபகரணங்களையும் வழங்க வேண்டும்.

ஊராட்சியில் 30 ஆண்டுகள் பணிபுரிந்து பணியில் இருக்கும்போது மரணமடைந்த பணியாளா்களுக்கு குடும்ப நலக் காப்பீடு திட்டத்தில் இருந்து உதவித்தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சி பள்ளிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு 5 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளா் ஆா்.சுதா்சனன், உள்ளாட்சிப் பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் என்.மனோகரன் உடனிருந்தனா்.

ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்: இரா.முத்தரசன்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் தமிழகத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தினாா். தருமபுர... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்

பென்னாகரம் நகர திமுக சாா்பில் வட்டார வளா்ச்சி அலுவலக பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்எல்ஏவும், திமுக விவசாய தொழிலாளா் அணி மாநில துணைத் தலைவருமான பி.என்.பி.இன்பசேகர... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களுக்கு திமுக சாா்பில் ரமலான் பரிசுத் தொகுப்பு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சியில் திமுக சாா்பில் இஸ்லாமியா்களுக்கு சனிக்கிழமை ரமலான் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு திமுக பேரூராட்சித் தலைவா் பி.கே.முரளி தலைமை வகித்தாா். மாநில... மேலும் பார்க்க

தருமபுரி மாவட்டத்தில் 251 ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் உலக தண்ணீா் தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதியமான்கோட்டை ஊராட்சி சாா்பில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு சட்டப் பேரவை உறுப... மேலும் பார்க்க

பாலக்கோடு குந்தியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் குந்தியம்மன், ஆறுபடை சக்தி வேல்முருகன் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வழிபாட்டில் பல்வேறு திரவியங்கள்... மேலும் பார்க்க

பெண்ணைக் கொன்ற மதபோதகருக்கு 14 ஆண்டுகள் சிறை

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே பெண்ணைக் கொன்ற வழக்கில் கிறிஸ்தவ போதகருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. அரூரில் உள்ள தேவால... மேலும் பார்க்க