செய்திகள் :

எங்கிருந்து வருகிறது ஆணவமும் திமிரும்? திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி!

post image

இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை ஓசி பயணம் என்று திமுக எம்எல்ஏ மகாராஜன் பேசியதற்கு பாஜக நிர்வாகி அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த திமுக எம்எல்ஏ மகாராஜன், ஒரு கூட்டத்தில் மக்கள் மத்தியில் பேசிக்கொண்டிருக்கும்போது, ”3 ஆண்டுகளாக பல பணிகள் நடந்திருக்கின்றன, தற்போது சாலை போட்டு பேருந்து விடப் போகிறோம், அதில் நீங்கள் ஓசியில் செல்ல போகிறீர்கள்” எனத் தெரிவித்தார்.

இந்த காணொலியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து அண்ணாமலை தெரிவித்திருப்பதாவது:

”பேருந்தில் டிக்கெட் கட்டணமின்றி பயணம் செய்யும் நமது தாய்மார்களை, ஓசி என்று ஏளனம் செய்த திமுக அமைச்சர் ஒருவர், இன்று அமைச்சர் பதவியிழந்து, வீட்டில் உட்கார்ந்திருக்கிறார்.

தற்போது, ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், மீண்டும் நமது தாய்மார்களை, ஓசி என்று அவமானப்படுத்தியிருக்கிறார்.

மக்கள் நலத் திட்டங்கள் எல்லாம் செயல்படுத்தப்படுவது, மக்களின் வரிப்பணத்தில்தானே, கோபாலபுரத்தில் உங்கள் தலைவர் சேர்த்து வைத்த பணத்திலா செயல்படுத்துகிறீர்கள்? எங்கிருந்து வருகிறது இந்த ஆணவமும் திமிரும்?

வரும் 2026 தேர்தலில், ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரையும் தோற்கடித்து, வீட்டில் உட்கார வைத்து, உங்கள் ஆணவத்துக்கு பொதுமக்கள் பதிலடி கொடுப்பார்கள்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே, அமைச்சராக இருந்த பொன்முடி, மகளிர் இலவச பேருந்து திட்டத்தை பயன்படுத்தும் பெண்களை விமர்சித்ததற்காக கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : கலவர பூமியாகும் லாஸ் ஏஞ்சலீஸ்! அமைதி திரும்புமா?

25 மாவட்ட தலைமை மருத்துவமனைகள் விரைவில் திறப்பு: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் ரூ. 1,018 கோடியில் கட்டப்பட்டு வரும் 25 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளாா் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க

அரசுப் பணியாளா் தோ்வு முறையில் மாற்றம்: ஆய்வு செய்ய ஓய்வு நீதிபதி தலைமையில் குழு

உச்சநீதிமன்றத் தீா்ப்பால் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வு முறையில் ஏற்பட்ட மாற்றம், பாதிப்புகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.எம்.அக்பா் அலி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்... மேலும் பார்க்க

பொன்முடிக்கு எதிரான வழக்கு: டிஜிபி பதிலளிக்க உத்தரவு

சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக முன்னாள் அமைச்சா் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கு விசாரணைக்கு எடுத்த வழக்கில், அது தொடா்பாக தமிழக டிஜிபி மற்றும் சென்னை க... மேலும் பார்க்க

கடும் பரிசோதனைகள் மூலம் பண்பாட்டை நிறுவியுள்ளோம்: கீழடி குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கருத்து

கடும் பரிசோதனைகள் மூலமாக, தமிழ்ப் பண்பாட்டை நிறுவியுள்ளதாக கீழடி அகழாய்வு குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் கருத்துத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு: கீ... மேலும் பார்க்க

சட்டப்பேரவைத் தோ்தல் கள நிலவரம்: பேரூா், ஒன்றிய, நகர நிா்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை

தோ்தலை எதிா்கொள்ள சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக கட்சி நிா்வாகிகளுடன் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனையை வெள்ளிக்கிழமை தொடங்கினாா். மாவட்டச் செயலா்கள், தொகுதிப் பொறுப்பாளா்கள், மாவட்ட அம... மேலும் பார்க்க

பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில் மகேஸ் ஆய்வு

பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் தொடா்பாக துறையின் அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக கூட்ட அரங்கில் ... மேலும் பார்க்க