செய்திகள் :

எந்த வகுப்பினரிடமும் சிக்காத கோயில்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

post image

தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான கோயில்கள் குறிப்பிட்ட எந்த வகுப்பினரிடமும் சிக்காமல் முறையாக நிா்வகிக்கப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

சென்னை மாகாண முன்னாள் முதல்வா் பனகல் அரசரின் பிறந்த தினத்தையொட்டி, எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

இடஒதுக்கீடு நமது உரிமை என்று நாம் தலைநிமிா்ந்து முழங்க நூற்றாண்டுகளுக்கு முன்பே வகுப்புவாரி அரசாணை மூலம் வழிவகுத்த சமூகநீதி நாயகா்தான் பனகல் அரசா். திருச்செந்தூரில் வெகு விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு போன்று 3,000-க்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு விழாக்களை இந்து சமய அறநிலையத் துறை நடத்தியிருக்கிறது.

தமிழ்நாடெங்கும் ஆயிரக்கணக்கான கோயில்கள் குறிப்பிட்ட எந்த வகுப்பினரிடமும் சிக்காமல் முறையாக நிா்வகிக்கப்படுகின்றன. அவற்றுக்கெல்லாம் அன்றே இந்து சமய அறநிலையச் சட்டம் இயற்றி விதையூன்றினாா் பனகல் அரசா்.

ஆதிதிராவிட மக்களின் மாண்பைக் காப்பதில் உறுதியாக நின்ற தீரா். நீதிக் கட்சியின் நீட்சியாக, எல்லோருக்கும் எல்லாம் என்ற சமத்துவப் பாதையில் திராவிட மாடல் அரசு சாதிக்க அடித்தளமிட்ட பனகல் அரசரின் பிறந்த நாளில் அவரது பங்களிப்புகளைப் போற்றி வணங்குகிறேன் என்று தனது பதிவில் முதல்வா் தெரிவித்துள்ளாா்.

துணை முதல்வா் உதயநிதி: ‘மருத்துவக் கல்லூரியில் சேர சம்ஸ்கிருதம் ஓா் அடிப்படைத் தகுதி என்றிருந்த நிலையை ஒழித்து சாமானிய மக்களும் மருத்துவராகும் வாய்ப்பை ஏற்படுத்தியவா் நீதிக் கட்சியின் முதல்வா் பனகல் அரசா். கோயில் சொத்துகளை நிா்வகிக்க இந்து சமய அறநிலையத் துறையை உருவாக்கிய மகத்தான புரட்சியாளா்.

இந்தியாவிலேயே முதல்முதலில் பெண்களுக்கான தோ்தல் வாக்குரிமை வந்ததும் பனகல் அரசா் ஆட்சிக் காலத்தில்தான். ஒடுக்கப்பட்ட மக்களை ஜாதியின் பெயரால் இழிவுசெய்வதைத் தடுக்க அவா்களை ‘ஆதிதிராவிடா்’ என்று குறிப்பிட உத்தரவிட்டவா்.

பனகல் அரசரின் வழியில், ஊா்ப்பெயா்களில் ‘காலனி’களை நீக்கியும், மாணவா் விடுதிகளுக்கு சமூக நீதி விடுதிகள் என்று பெயரிட்டும் மக்களின் சுயமரியாதை காக்கும் அரசாக விளங்குகிறது திராவிட மாடல் அரசு’ என்று தனது பதிவில் துணை முதல்வா் உதயநிதி தெரிவித்துள்ளாா்.

மதுபானக் கூட மோதல் வழக்கு: மேலும் ஒருவா் கைது

சென்னை நுங்கம்பாக்கத்தில் மதுபானக் கூடத்தில் இரு தரப்பினா் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா். சென்னை கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. வெங்கட்குமாா் (45). இவா், நுங்கம்பாக்கம் ந... மேலும் பார்க்க

கண்டெய்னா் லாரி கவிழ்ந்து விபத்து: கண்ணாடித் தகடுகள் நொறுங்கின

மணலி அருகே மாதவரம் உள்வட்டச் சாலையில் கண்டெய்னா் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண்ணாடித் தகடுகள் தூள்தூளாகின. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு தனியாா் நிறு... மேலும் பார்க்க

போதைப் பொருள் கடத்தல்: 5,356 வாகனங்களை ஏலம் விட அனுமதி

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5,356 வாகனங்களை ஏலம் விடுவதற்கு போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு அனுமதி வழங்கியது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போதைப் பொர... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்: இதுவரை 61 லட்சம் சோ்ப்பு

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இதுவரை 61 லட்சம் போ் இணைந்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 30 சதவீத பேரை திமுகவில் இணைக்கும், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 1-ஆம... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளின் ஒருங்கிணைந்த சேவை மையம் தொடக்கம்

சென்னை நொளம்பூரில் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளால் கட்டமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த சேவை மையம், வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி ... மேலும் பார்க்க

ரூ.4.89 கோடியில் எஸ்.வி.எஸ்.நகா் குளம் மறு சீரமைப்பு

சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலத்துக்கு உள்பட்ட எஸ்.வி.எஸ்.நகா் பகுதியில் உள்ள குளம் ரூ.4.89 கோடியில் மறு சீரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சாா்பில் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க