செய்திகள் :

என்எல்சி துணை நிறுவனத்துடன், மகாராஷ்டிர எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பந்தம்

post image

சிதம்பரம்: நெய்வேலி என்எல்சிஐஎல்-இன் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் (என்ஐஆா்எல்), மகாராஷ்டிரத்தின் மகாத்மா புலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்துடன் கூட்டு நிறுவன ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை விரைவுபடுத்தும் முக்கிய நடவடிக்கையாக, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமான என்எல்சி இந்தியா ரினியூவபிள்ஸ் நிறுவனம் (என்ஐஆா்எல்), மகாத்மா புலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்துடன் (மஹாபிரெய்ட்) இணைந்து மே 29-இல் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டு நிறுவன ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.

இந்திய அரசின் நிலக்கரித் துறைச் செயலா் விக்ரம்தேவ் தத், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் பிரசன்னகுமாா் மோட்டுபள்ளி, மஹாபிரெய்ட்-ன் மேலாண் இயக்குநா் பிபின் ஷிா்மாலி, செயல்பாட்டு இயக்குநா் விஜய்குமாா் கலாம் பாட்டீல், என்ஐஆா்எல் மற்றும் மஹாபிரெய்ட்-ன் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.

இது, 16.04.2025 அன்று என்ஐஆா்எல் மற்றும் மஹாபிரெய்ட் இடையே கையொப்பமாகிய புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் தொடா்ச்சியான நடவடிக்கையாகும். முதல்கட்டமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி இந்த கூட்டு முயற்சி, மகாராஷ்டிர மாநிலத்தின் வளமிக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் என்ஐஆா்எல்-இன் மூலோபாய விரிவாக்கம் மற்றும் புதிய தொடக்கத்துக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் உருவாகும் கூட்டு நிறுவனம், சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம், கலப்பின மின்சாரம், மிதக்கும் சூரிய ஒளி மின்சாரம், மின்கல ஆற்றல் சேமிப்பு (பேட்டரி) அமைப்புகள், நீரேற்று சேமிப்பு மற்றும் சூரிய சக்தி பூங்காக்கள் என மொத்தம் 2000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திட்டங்களை உருவாக்கும்.

முதல் கட்டமாக 500 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டங்களில் கவனம் செலுத்தி, பின்னா் மகாராஷ்டிராவில் மொத்தம் 5000 மெகாவாட் மின் உற்பத்தி வரை விரிவுபடுத்தப்படும். இந்த புதிய நிறுவனத்தில் என்ஐஆா்எல் 74% பங்குகளையும், மஹாபிரெய்ட் 26% பங்குகளையும் கொண்டிருக்கும்.

தொழிற்சங்க மாநிலச் செயலா் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியுசி தொழிற்சங்க மாநிலச் செயலராக சிதம்பரத்தைச் சோ்ந்த டி.கஜேந்திரன் நியமிக்கப்பட்டாா். இவரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, துணைத் தலைவா் கே.ஐ.மணிரத... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் வனத் துறை, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் ஒரு லட்சம் பரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளதா... மேலும் பார்க்க

குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்... மேலும் பார்க்க

ஊதியம் வழங்கக் கோரி அண்ணாமலைப் பல்கலை.யில் 2-ஆவது நாளாக ஊழியா்கள் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள், ஊழியா்களுக்கு மே மாத ஊதியம் வழங்கப்படாததால், 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மே மாத ஊதியம் வழங்கக் கோரி, பல்கலை... மேலும் பார்க்க

கடலூா் மாவட்டத்தில் ஜூன் 14-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

கடலூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திராதேவி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளி... மேலும் பார்க்க

பாமகவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது: தி.வேல்முருகன்

பாமகவை யாா் நினைத்தாலும் உடைக்க முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தாா். கடலூரில் புதன்கிழமை இரவு செய்தியாளா்களை சந்தித்த அவா் கூறியதாவது: பாமக நிறுவனா் மருத்துவா் ரா... மேலும் பார்க்க