செய்திகள் :

``என் பங்கு பாதி உடம்பை பிரித்து கொடு.." - தந்தையின் இறுதிச் சடங்கில் மகன் குடிபோதையில் தகராறு!

post image

குடிகாரர்கள் குடிபோதையில் செய்யும் காரியங்கள் சில நேரம் வேடிக்கையாகவும், வினோதமாகவும் இருக்கும். பல நேரங்களில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தும். மத்திய பிரதேசத்தில் அது போன்ற ஒரு சம்பவத்தால் ஊரே கலகலத்துப்போனது.

மத்திய பிரதேச மாநிலம் திகம்கர் மாவட்டத்தில் உள்ள லிதோராட்டால் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தயானி சிங் (85). இவர் தனது இளைய மகன் தஸ்ரஜ் என்பவருடன் வசித்து வந்தார். தயானி சிங்கின் மூத்த மகன் கிஷன் அருகில் உள்ள நகரத்தில் வசித்து வந்தார்.

உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்த தயானி சிங் திடீரென இறந்து போனார். இது குறித்து அவரது மூத்த மகனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவரது மூத்த மகன் கிஷன் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு வந்தார். தனது தந்தையின் இறுதிச்சடங்கை `நான் தான் செய்வேன்' என்று கிஷன் தெரிவித்தார்.

ஆனால், `நான் தான் இறுதிச்சடங்கை செய்வேன்' என்றும், `தந்தை இறந்தபோது என்னை இறுதிச்சடங்கு செய்யவேண்டும்' என்று கூறிவிட்டு இறந்துவிட்டதாக தஸ்ரஜ் தெரிவித்தார். ஆனால் அதனை கிஷன் ஏற்றுக்கொள்ள மறுத்தார். கிஷன் குடிபோதையில் நான் தான் இறுதிச்சடங்கை செய்வேன் என்று பிடிவாதமாக இருந்தார். இதையடுத்து தந்தையின் இறந்த உடம்பின் பாதி பகுதியை பிரித்து தன்னிடம் கொடுக்கவேண்டும் என்றும், அதனைக்கொண்டு இறுதிச்சடங்கை செய்வேன் என்றும் கிஷன் தெரிவித்தார். இதனால் குழப்பம் ஏற்பட்டது. பிரச்னைக்கு தீர்வு காண முடியாத காரணத்தால் இது குறித்து கிராமத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீஸார் விரைந்து வந்து கிஷனுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தைக்கு பிறகு கிஷன் தனது முடிவை மாற்றிக்கொண்டார். இதையடுத்து, இளைய மகன் தஸ்ரஜ் தனது தந்தையின் இறுதிச்சடங்கை நடத்தினார். குடிபோதையில் கிஷன் செய்த செயலால் கிராம மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

``வங்கியில் உள்ள மொத்த பணமும் வேண்டும்'' -காசோலை எழுதிய பெண்; வைரல் புகைப்படத்தின் பின்னணி என்ன?

வங்கியில் உள்ள மொத்த பணத்தையும் கேட்டு பெண் ஒருவர் விண்ணப்பித்த காசோலை இணையத்தில் வைரலாகி வருகிறது.பொதுவாக வங்கிக்கு சென்றாலே அங்கு இருக்கும் சலானை நிரப்புவதில் பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். குறிப்பா... மேலும் பார்க்க

கணவரின் கிட்னியை ரூ.10 லட்சத்திற்கு விற்று காதலனுடன் மாயமான மனைவி! - என்ன நடந்தது?

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவரின் சிறுநீரகத்தை விற்க வற்புறுத்தி அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு காதலுடன் சென்றுள்ளார். மேற்குவங்கம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள சங்க்ரைலைச் சேர்ந்த இந்தப் பெ... மேலும் பார்க்க

டெல்லி: 'சோலிகே பீச்சே கியாஹை' பாடலுக்கு நடனமாடிய மணமகன்; திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணின் தந்தை

டெல்லியில் ரகு (26) என்பவருக்குத் திருமணம் ஏற்பாடாகி இருந்தது. மணமகன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். மணமகன் மணமேடையில் மணப்பெண்ணின் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தார். அந்நேரம் மணமகனின் நண்பர்கள் பாடல்... மேலும் பார்க்க

உபி: உயிரைக் குடித்த ரூ.100 பந்தயம்; குடிபோதையில் குளத்தை நீந்திக் கடக்க முயன்றவருக்கு நேர்ந்த சோகம்

உத்தரப்பிரதேசத்தில் ரூ.100க்கு ஆசைப்பட்டு சவால் விட்டு ஒருவர் தனது உயிரை இழந்துள்ளார். அங்குள்ள ஜான்சி அருகில் உள்ள பூனாவாலி காலா என்ற கிராமத்தில் வசித்தவர் உத்தம் ரஜபுத். இவர் தனது நண்பர்கள் நான்கு ப... மேலும் பார்க்க

தாயை மாட்டுவண்டியில் வைத்து இழுத்து வந்த மகன்; கிரேக்கப் பெண்ணின் திருமணம்; கும்பமேளா சுவாரஸ்யங்கள்!

உத்தரப்பிரதேசத்தில் நடந்து வரும் கும்பமேளாவில் இன்று மட்டும் 10 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதில் இன்று அதிகாலை கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இக்கூட்ட நெரிசலில் சிக்கி 30க்கும்... மேலும் பார்க்க