செய்திகள் :

``என் வீட்டிலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர்'' - பாமக ராமதாஸ் பரபரப்புக் குற்றச்சாட்டு

post image

ராமதாஸ் - அன்புமணி மோதல் விவகாரம் முடிவுறாத கதையாக நீண்டுகொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்த வண்ணமிருக்கிறார்கள்.

இந்தக் கருத்து மோதலில் ராமதாஸ், தன் பெயரை அன்புமணியின் பெயருக்குப் பின்னால் போடக்கூடாது என்றும், இன்ஷியலை மட்டும் போட்டுக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் கடுமையாகப் பேசியிருந்தார். இதற்கிடையில் அன்புமணி, ராமதாஸ் வெளியூருக்குச் சென்றிருந்த நேரத்தில் தைலாபுரம் வீட்டிற்குச் சென்று அவரது அம்மாவைப் பார்த்திருக்கிறார்.

ராமதாஸ், அன்புமணி

இந்நிலையில் இன்று (ஜூலை 11) விருதாச்சலத்தில் பாமகவின் கூட்டத்தில் பேசிய ராமதாஸ், "அன்புமணி அவரது வீட்டிற்குச் செல்கிறார். அதில் என்ன தவறு இருக்கிறது. பெயருக்குப் பின்னால் என் பெயரைப் பயன்படுத்தக்கூடாது என்றேன். என் இன்ஷியலை வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளட்டும்.

பாமக தலைவர் பதவி தேர்தல் ஆணையத்திடம் கோரி முறையான நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டணியைப் பொறுத்தவரை இன்னும் முடிவெடுக்கவில்லை. பாமக எந்த அணியில் சேருகிறதோ அந்த அணி இதுவரை இல்லாத அளவிற்கு வெற்றியைப் பெறும். ஏனென்றால் அது அப்படிப்பட்ட பலமான கூட்டணியாக இருக்கும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்

வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்திருப்பது குறித்து, "என் வீட்டிலேயே, நான் உட்கார்ந்திருக்கும் இடத்திலேயே ஒட்டுக் கேட்கும் கருவியை வைத்துள்ளனர். நேற்றைக்கு முன் தினம்தான் அதைக் கண்டுபிடித்தோம். அது லண்டனில் இருந்து வந்தது என்று கூறுகிறார்கள். அது அதை யார், எதற்காக வைத்தார்கள் என்பதை ஆராய்ந்து வருகிறோம்" என்று பேசியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

ஆட்டோ தொழிலாளர்களைக் கண்டுகொள்ளாத மாநில அரசும்; OLA, UBER-க்குச் சாதகமான மத்திய அரசும் | In-Depth

சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் மக்களின் பயன்பாட்டுக்கு அரசுப் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் போன்ற பொதுப் போக்குவரத்து சேவைகள் இருந்தாலும், ஆட்டோ, டாக்சி போன்ற தன... மேலும் பார்க்க

வேலூர்: கோட்டையின் நடைபாதையில் ஏற்பட்ட பள்ளம்; அச்சத்துடன் நடந்து செல்லும் பாதசாரிகள்!

வேலூரின் அடையாளமாக விளங்கக்கூடிய வேலூர் கோட்டைக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். வேலூர் கோட்டையை முழுவதுமாக சுற்றி வர கோட்டை சுற்று சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்தச் சாலையின... மேலும் பார்க்க

Bengaluru: சாலையில் அனுமதி இன்றி பெண்களை வீடியோ எடுத்த இன்ஃப்ளூயன்சர்... காவல்துறை எடுத்த நடவடிக்கை!

இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பதிவிட்டு வரும் பலர், அனுமதியின்றி சாலைகளில் இருக்கும் பெண்களை, குழந்தைகளை வீடியோ எடுத்துப் பதிவிடுவது தொடர்ந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்... மேலும் பார்க்க

`எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவும் சதிச் செயல்தான் செய்தார்களா?’ - எடப்பாடி பழனிசாமிக்கு சேகர் பாபு பதிலடி

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் வருமானத்தை வைத்து, கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் எப்படி தொடங்கலாம், கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது சதி செயல் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ... மேலும் பார்க்க

``ரயில்வே கேட் பகுதிகளில் கேமராக்கள் பொருத்த வேண்டும்'' -ரயில்வே அமைச்சகத்தின் அதிரடி உத்தரவுகள்!

கடலூர் அருகே செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. வேனில் நான்கு பேர் பயணித்தாகக் கூறப்படும் நிலையில், 3 பேர் உயிரிழந்திருகி... மேலும் பார்க்க

Trump Tariffs: பிரேசில் இறக்குமதிகளுக்கு 50% வரி வித்த அமரிக்கா; அதிர்ச்சியில் உலக நாடுகள்!

டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின்னர் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை, மீண்டு அமெரிக்காவை ஆகச் சிறந்த நாடாக மாற்றுவோம் என்ற கொள்கைகளை முன்நிறுத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவை உலக ந... மேலும் பார்க்க