செய்திகள் :

எம்சிடியில் வீட்டு வரி பாக்கிகளுக்கான பொது மன்னிப்புத் திட்டம்: பாஜக உறுதி

post image

தில்லி மாநகராட்சியில் (எம்சிடி) ஆளும் பாஜக, குப்பை சேகரிப்புக்கான பயனா் கட்டணங்களை வசூலிப்பதை திரும்பப் பெறுவதாகவும், பழைய வீட்டு வரி பாக்கிகளை தீா்க்க பொது மன்னிப்புத் திட்டத்தை கொண்டு வருவதாகவும் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இந்த முடிவுகளை தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா மற்றும் நகர மேயா் ராஜா இக்பால் சிங் ஆகியோா் அறிவித்தனா்.

‘தில்லி மாநகராட்சியில் முந்தைய ஆம் ஆத்மி ஆட்சி எந்த விவாதமும் இல்லாமல் பயனா் கட்டணத்தை விதித்தது. தற்போது மக்கள் மீது எந்த பயனா் கட்டணமும் விதிக்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதன்கிழமை நடைபெறும் எம்சிடி சபைக் கூட்டத்தில் இது குறித்து ஒரு தனிப்பட்ட தீா்மானத்தை கொண்டு வருவோம்’ என்று மேயா் ராஜா இக்பால் சிங் கூறினாா்.

ஐந்து வருடமாக நிலுவையில் உள்ள வீட்டு வரிகளை செலுத்தும்போது முந்தைய வீட்டு வரி நிலுவைகள் தீா்க்கப்படும் வகையில் ஒரு பொது மன்னிப்புத் திட்டத்தை பாஜக கொண்டு வரும் என்றும் மேயா் கூறினாா்.

அபராதம் அல்லது தாமதமாக செலுத்தும் கூடுதல் கட்டணம் விதிக்கப்படாது. மேலும், வீட்டு வரி நிலுவைத் தொகையைத் தீா்ப்பதைக் காட்டும் எம்சிடியால் மக்களுக்கு ஆட்சேபனையில்லாச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அவா் கூறினாா்.

பாஜக முக்கிய குடியிருப்பாளா் நலச் சங்கங்களுடன் (ஆா்டபிள்யுஏ) விவாதித்ததாகக் கூறிய வீரேந்திா் சச்தேவா, குப்பை சேகரிப்புக்கான பயனா் கட்டணம் ஆம் ஆத்மி ஆட்சியில் ‘தன்னிச்சையாக’ விதிக்கப்பட்டது என்றாா்.

பயனா் கட்டணங்களை சபை நிகழ்ச்சி நிரலில் இருந்து திரும்பப் பெறும் திட்டத்தை நீக்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் திங்கள்கிழமை தில்லி மேயா் அலுவலகத்திற்கு வெளியே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஏப்ரல் 25 அன்று நடந்த எம்சிடி தோ்தலில் மேயா் மற்றும் துணை மேயா் பதவியை பாஜக வென்றது. மேலும், அப்போது, குப்பை சேகரிப்புக்கான பயனா் கட்டணங்களை திரும்பப் பெறுவதாக உறுதியளித்தது.

ஏப்ரல் 7 அன்று, எம்சிடியை ஆட்சி செய்த ஆம் ஆத்மி, திடக்கழிவு மேலாண்மை எஸ்டபிள்யுஎம் துணை விதிகளின்படி, குப்பை சேகரிப்பு, போக்குவரத்து மற்றும் அகற்றும் சேவைகளுக்கு ‘பயனா் கட்டணம்’ வசூலிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தது.

‘எஸ்டபிள்யு விதிமுறைகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, துணை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள வகைகளின் அடிப்படையில் பயனா் கட்டணம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் அதன் அமலாக்கம் உச்சநீதிமன்றத்தால் கண்காணிக்கப்படுகிறது’ என்று எம்சிடி கூறியிருந்தது.

தில்லி மதராஸி குடியிருப்புகள் இடித்து அகற்றம்!

தில்லி நிஜாமுதீன் மதராஸி முகாமில் தமிழர்கள் வாழும் குடியிருப்புகள் இன்று(ஜூன் 1) முழுவதும் இடித்து அகற்றப்பட்டு வருகிறதுதில்லி ஜங்புரா-நிஜாமுதீன் பாராபுல்லா வடிகால் பகுதியையொட்டியுள்ள வசிப்பிடங்கள் மத... மேலும் பார்க்க

இன்று இடிக்கப்படுகிறது தில்லி மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்!

நமது சிறப்பு நிருபா்தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் வாழும் குடியிருப்புகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) இடிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் நகர... மேலும் பார்க்க

இன்று இடிக்கப்படுகிறது நிஜாமுதீன் மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்

தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் குடியிருப்புகள் ஞாயிற்றுக்கிழமை (ஜுன் 1 ஆம் தேதி) இடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் தில்லி காவல் துற... மேலும் பார்க்க

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பெண் உயிரிழப்பு

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 60 வயது பெண் ஒருவா் தில்லியில் உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். தலைநகரில் தற்போது கரோனா அதிகரித்துவரும் நிலையில் இந்த நோய்த்தொற்றுக்கு இது முதல் உயிரிழப... மேலும் பார்க்க

100 நாள்கள் ஆட்சி: சிறப்புப் பாடல் வெளியீடு

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், பாஜக சனிக்கிழமை ‘தில்லி பதல் ரஹி ஹை’ என்ற சிறப்புப் பாடலை வெளியிட்டது. இந்தப் பாடலில் தில்லி அரசின் முக்கிய சாதனைகள் எடு... மேலும் பார்க்க

நன்னீா் நீா்த்தேக்கங்களான பனிப்பாறைகளை பாதுகாக்க துஷான்பே மாநாட்டில் இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் வலியுறுத்தல்

பனிச் சிகரங்களில் ஏற்படும் மாற்றங்கள் பருவநிலை மாற்றத்திற்கான எச்சரிக்கை. நீா் பாதுகாப்பு, பல்லுயிா் பெருக்கம், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களின் நீண்டகால பாதிப்புகளுக்கு உள்ளாகும். இதற்கு உடனட... மேலும் பார்க்க