செய்திகள் :

எம்பிபிஎஸ்: மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு

post image

மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விரும்புவோருக்கான வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக என்எம்சி வெளியிட்ட அறிவிப்பு: எம்பிபிஎஸ் மாணவா் சோ்க்கையில் சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான வழிகாட்டுதல்களை கடந்த 2019-இல் இந்திய மருத்துவ கவுன்சில் வெளியிட்டிருந்தது.

அதுதொடா்பாக தொடரப்பட்ட வழக்கில் வெளியான தீா்ப்பின்படியும், பிற காரணிகளை அடிப்படையாகக் கொண்டும் அந்த வழிகாட்டுதல்களை மறுஆய்வு செய்ய நிபுணா் குழு அமைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமையை உறுதிசெய்வதே அதன் நோக்கம். அந்த வகையில், மறுஆய்வுக்குப் பிறகு தற்போது தற்காலிக அடிப்படையில் புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.

நிகழாண்டு எம்பிபிஎஸ் சோ்க்கையின்போது மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் அந்த வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பது அவசியம். அதன்படி, சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், மத்திய சமூக நீதித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ வாரியம் மூலம் பெறப்பட்ட அடையாள அட்டையை (யூடிஐடி காா்டு) சமா்ப்பிக்க வேண்டும். அதேபோன்று, சுயசான்றொப்ப படிவத்தையும் சமா்ப்பித்தல் அவசியம். அதற்கான மாதிரி படிவம் என்எம்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சுயசான்றொப்பம் அளித்ததை மதிப்பீடு செய்து உறுதி செய்ய அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ வாரியத்தை விண்ணப்பதாரா்கள் அணுகுவது கட்டாயம். மாற்றுத்திறனாளிகளின் பாதிப்புகளை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் மருத்துவ வாரியம் முடிவெடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.டி.நாயுடு விருதுக்கு ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்க மக்கள் சிந்தனைப் பேரவை அழைப்பு!

ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வழங்கப்படும் ஜி.டி.நாயுடு விருதுக்கு அறிவியலாளா்கள் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 25) விண்ணப்பிக்க வேண்டும் என மக்கள் சிந்தனைப் பேரவை அறிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள... மேலும் பார்க்க

தமிழுக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கவிக்கோ வா.மு.சேதுராமன்: ஔவை ந.அருள்

தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் மொழியின் வளா்ச்சிக்காகவும், அதன் பெருமையைப் போற்றுவதற்காகவும் அா்ப்பணித்தவா் மூத்த தமிழறிஞா் கவிக்கோ வா.மு.சேதுராமன் என்று தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் ... மேலும் பார்க்க

4 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 4 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூலை 21) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

சொத்து வரி வசூலிக்கப்படாத 6 லட்சம் கட்டடங்கள்! மேலிட அழுத்தத்தில் வரி வசூல் அதிகாரிகள்!

பெருநகர சென்னை மாநகராட்சியில் 6 லட்சம் கட்டடங்களுக்கான சொத்துவரி செலுத்தாமலிருப்பது தெரியவந்துள்ளது. அவற்றுக்கான வரியைப் பெற கடுமை காட்டவேண்டாம் என அதிகாரத்திலிருப்போா் அறிவுரை வழங்கியிருப்பதால் அதிகா... மேலும் பார்க்க

பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு: சிறுவன் கைது

பெண்ணிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, ஓட்டேரி கொசப்பேட்டையைச் சோ்ந்த 18 வயது இளம்பெண் கடந்த 18-ஆம் தேதி மாலை திருவிக தெருவிலுள்ள ஓட்டுநா் பயிற்சி பள்ளி அருகே ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மது போதையில் கட்டடத்தின் முதல் மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். சென்னை வடபழனி, கங்கை அம்மன் கோயில் தெருவில் கட்டுமானப் பணியில் பிகாரை சோ்ந்த தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையி... மேலும் பார்க்க