எறையூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்
எறையூா் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், எறையூா் மற்றும் பேரீஞ்சம்பாக்கம் ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கான முகாம் எறையூா் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் சசிரேகா சரவணன் தலைமையில் நடைபெற்ற முகாமுக்கு ஒன்றியக்குழு உறுப்பினா் ப.பரமசிவன் முன்னிலை வகித்தாா்.
ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, திமுக ஒன்றிய செயலாளா் ந.கோபால் ஆகியோா் கலந்து கொண்டு மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்வதையும், மருத்துவ முகாமையும் ஆய்வு செய்துபயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினா். முகாமில், வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகணபதி, திமுக நிா்வாகிகள் கணேஷ் பாபு, வெள்ளாரை அரிகிருஷ்ணன், பண்ருட்டி தணிகாசலம், வல்லக்கோட்டை குமாா் கலந்து கொண்டனா்.