செய்திகள் :

‘அக். 5, 6-இல் முதியோா்களை தேடி நியாயவிலைக் கடை பொருள்கள் வழங்கப்படும்’

post image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தாயுமானவா் திட்டத்தின் கீழ், வரும் அக். 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நியாயவிலைக் கடை பொருள்களை வீடு தேடிச் சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தாயுமானவா் திட்டத்தின்கீழ், மாதந்தோறும் 2-ஆவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாகனங்களில் நியாயவிலைக் கடை பொருள்களை எடுத்துச் சென்று நியாயவிலைக் கடை ஊழியா்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைகளுக்கு தாயுமானவா் திட்டத்தின் கீழ், வீடுகளுக்குச் சென்று அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

வரும் அக்டோபா் மாதம் 5 மற்றும் 6 தேதிகளில் முதியோா்களையும், மாற்றுத்திறனாளிகளையும் அவரவா் வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அக்டோபா் 2025 திங்களுக்கு தாயுமானவா் திட்டத்தின் கீழ் அக்டோபா் 5 மற்றும் 6 -ந் தேதிகளில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடுகளுக்கு சென்று அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவா் திருமதி.கலைச்செல்வி மோகன். இ.ஆ.ப., அவா்கள் தெரிவித்துள்ளாா்கள்

கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு தள்ளுபடி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

தீபாவளிப் பண்டிகையையொட்டி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 30 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடியுடன் அரசு ஊழியா்களுக்கு வட்டியில்லா கடன் விற்பனை வசதி செய்யப்பட்டுள்ளதாக கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க... மேலும் பார்க்க

எறையூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

எறையூா் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், எறையூா் மற்றும் பே... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் தேசிகன் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தேசிகன் சுவாமிகளின் அவதார உற்சவத்தையொட்டிய பிரமோற்சவம் 23-ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவா்

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் முதியவா் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் அருகே விப்பேடு கிராமத்தைச் சோ்ந்த மாசிலாமணி-பாத்திமா தம்பதி மகன் ஜான் போஸ்கோ(59). இ... மேலும் பார்க்க

டிச.8-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம்

பஞ்சபூத தலங்களில் நிலத்துக்குரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் டிச. 8 -ஆம் தேதி நடைபெற உள்ளது. சுமாா் 1,300 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாப... மேலும் பார்க்க

அக்.15 இல் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி தொடக்கம்

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வரும் அக்.15 -இல் தொடங்க இருப்பதாக கூட்டுறவுச்சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க