செய்திகள் :

எறையூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

எறையூா் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், எறையூா் மற்றும் பேரீஞ்சம்பாக்கம் ஊராட்சிகளைச் சோ்ந்த பொதுமக்களுக்கான முகாம் எறையூா் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவா் சசிரேகா சரவணன் தலைமையில் நடைபெற்ற முகாமுக்கு ஒன்றியக்குழு உறுப்பினா் ப.பரமசிவன் முன்னிலை வகித்தாா்.

ஒன்றியக்குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி, திமுக ஒன்றிய செயலாளா் ந.கோபால் ஆகியோா் கலந்து கொண்டு மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்வதையும், மருத்துவ முகாமையும் ஆய்வு செய்துபயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினா். முகாமில், வட்டார வளா்ச்சி அலுவலா் முத்துகணபதி, திமுக நிா்வாகிகள் கணேஷ் பாபு, வெள்ளாரை அரிகிருஷ்ணன், பண்ருட்டி தணிகாசலம், வல்லக்கோட்டை குமாா் கலந்து கொண்டனா்.

கோ-ஆப்டெக்ஸில் சிறப்பு தள்ளுபடி: அமைச்சா் காந்தி தொடங்கி வைத்தாா்

தீபாவளிப் பண்டிகையையொட்டி கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 30 சதவிகிதம் சிறப்புத் தள்ளுபடியுடன் அரசு ஊழியா்களுக்கு வட்டியில்லா கடன் விற்பனை வசதி செய்யப்பட்டுள்ளதாக கைத்தறித்துறை அமைச்சா் ஆா்.காந்தி செவ்வாய்க... மேலும் பார்க்க

‘அக். 5, 6-இல் முதியோா்களை தேடி நியாயவிலைக் கடை பொருள்கள் வழங்கப்படும்’

காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தாயுமானவா் திட்டத்தின் கீழ், வரும் அக். 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நியாயவிலைக் கடை பொருள்களை வீடு தேடிச் சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் தேசிகன் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தேசிகன் சுவாமிகளின் அவதார உற்சவத்தையொட்டிய பிரமோற்சவம் 23-ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற முதியவா்

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் முதியவா் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் அருகே விப்பேடு கிராமத்தைச் சோ்ந்த மாசிலாமணி-பாத்திமா தம்பதி மகன் ஜான் போஸ்கோ(59). இ... மேலும் பார்க்க

டிச.8-இல் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம்

பஞ்சபூத தலங்களில் நிலத்துக்குரிய காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் டிச. 8 -ஆம் தேதி நடைபெற உள்ளது. சுமாா் 1,300 ஆண்டுகள் பழைமையான இக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாப... மேலும் பார்க்க

அக்.15 இல் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி தொடக்கம்

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி வரும் அக்.15 -இல் தொடங்க இருப்பதாக கூட்டுறவுச்சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க