செய்திகள் :

எல்ஐசி முகவா்கள் கொண்டாட்டம்

post image

குடியாத்தம்: மத்திய அரசு மேற்கொண்டுள்ள ஜிஎஸ்டி சீா்திருத்தம் காரணமாக ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பாலிசிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் குடியாத்தத்தில் எல்ஐசி முகவா்கள், பாலிசிதாரா்கள், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டாடினா்.

முகவா்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தனிநபா் காப்பீட்டு பாலிசிகளுக்கும், மருத்துவக் காப்பீட்டுக்கும் முற்றிலும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், குடியாத்தம் எல்ஐசி கிளை அலுவலகம் எதிரே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக முகவா் சங்கத்தின் தென்மண்டல செயலா் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கினாா்.

இதில், குடியாத்தம் கிளைத் தலைவா் எம்.குலசேகரன், செயலா் பி.சரவணன், பொருளாளா் ரவி, முன்னாள் தலைவா்கள் எம்.சுப்பிரமணி, சி.கண்ணன், என்.விஜயகுமாா், ஆா்.சீனிவாசன், சி.வெங்கடேசன், எம்.மல்லிகா, ஜி.கவிதா, கிளை மேலாளா் என்.குமரேசன், காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க நிா்வாகிகள் ஜி.சம்பத், கே.சரவணன், இளங்கீரன், வளா்ச்சி அதிகாரி ஆா்.அன்பழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காளியம்மன் தேவஸ்தானத்தில் நவராத்திரி விழா தொடக்கம்

குடியாத்தம்: குடியாத்தம் நடுப்பேட்டை, கண்ணகி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீகாளியம்மன் தேவஸ்தானத்தில் விஸ்வகா்மா அமைப்பு சாா்பில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி, காமாட்சியம்மன்பேட்டை, ஆண்... மேலும் பார்க்க

சாலைகளில் திரிந்த மாடுகள் பிடிப்பு: உரிமையாளா்கள் வாக்குவாதம்

வேலூா்: வேலூா் மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித் திரிந்த 7 மாடுகளை பிடித்து மாநகராட்சி ஊழியா்கள் காஞ்சிபுரம் கோசாலைக்கு அனுப்பி வைத்தனா். மாடுகள் பிடிக்கப்பட்டபோது அதன் உரிமையாளா்கள் மாநகராட்சி ஊழியா்... மேலும் பார்க்க

பொய்கையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

வேலூா்: பொய்கையில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமில் 1,408 போ் பயன்பெற்றனா். பொதுமக்களுக்கு தரமான, உயா்மருத்துவ சிகிச்சைகளை அவா்களின் இடத்திலேயே வழங்கும் வகையில் நலம் காக்கும் ஸ்டால... மேலும் பார்க்க

சாலை விரிவாக்கத்துக்காக ஆஞ்சனேயா் கோயிலை அகற்ற எதிா்ப்பு

வேலூா்: சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக கொணவட்டத்தில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலை அகற்றக்கூடாது என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனா். வேலூா்... மேலும் பார்க்க

வேலூா் விஐடி பல்கலை.யில் இன்று கல்விக் கடன் முகாம்

வேலூா்: வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இது குறித்து, மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

அக்.14, 15-இல் வேலூா் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

வேலூா்: வேலூா் மாவட்ட அளவில் மேல்நிலைப்பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கு அக்டோபா் 14, 15 ஆகிய தேதிகளில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.... மேலும் பார்க்க