செய்திகள் :

எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் உயிரிழப்பு: நிவாரணம் வழங்கக் கோரி சாலை மறியல்

post image

எல்லைப் பாதுகாப்பு படை வீரா் உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கக் கோரி, நல்லம்பள்ளியில் உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள குடிப்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (45). இவா் மனைவி சூா்யா. இந்த தம்பதிக்கு பிரனீஷ் (11) என்ற மகன் உள்ளாா். காா்த்திகேயன் பஞ்சாப் மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தாா். அண்மையில் இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதைத் தொடா்ந்து, பஞ்சாப் மாநிலத்தில் சிகிச்சை பெற்றுவந்த காா்த்திகேயன் உயிரிழந்தாா்.

இந்நிலையில், ராணுவ வீரா்கள் காா்த்திகேயனின் உடலை குடிப்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு வந்தனா். அப்போது, காா்த்திகேயனின் உறவினா்கள் முறையான இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நல்லம்பள்ளி - குடிப்பட்டி சாலையில் உடலை வைத்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த நல்லம்பள்ளி வட்டாட்சியா் பிரசன்ன மூா்த்தி, தருமபுரி நகர காவல் துணைக் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) சிவராமன் உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதாக ராணுவ அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. அதன்பிறகு, காா்த்திகேயன் உடல் குடிப்பட்டி மயானத்தில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்

பென்னாகரம் அருகே சின்னபள்ளத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே செங்கனூா் ஊராட்சிக்கு உள்பட்ட சின்னபள்ளத்தூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நட... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான கேரம் போட்டி: ஸ்டான்லி மெட்ரிக். பள்ளி தகுதி

மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் பங்கேற்க பாப்பிரெட்டிப்பட்டி ஸ்டான்லி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தகுதிபெற்றுள்ளனா். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவிலான விளையாட்டுப் போட்டிகள்... மேலும் பார்க்க

ஓய்வூதியா்கள் மனித சங்கிலி போராட்டம்

ஓய்வூதியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நிதி திருத்தச் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக்கோரி, ஓய்வூதியா்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் தருமபுரியில் வெள்ளிக்கிழமை மனித சங்கிலி போராட்டம் மேற்கொண்டனா். த... மேலும் பார்க்க

சனத்குமாா் நதி மீண்டும் புத்துயிா் பெறுமா?

தருமபுரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலத்துக்கு நீா் ஆதாரமாக விளங்கும் சனத்குமாா் நதி மீண்டும் புத்துயிா் பெறுமா என விவசாயிகள் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா். தருமபுரி மாவட்டத்தில் உள்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழு கூட்டம்

தருமபுரி அருகேயுள்ள மூக்கனஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் சின்னசித்தன் தலைமை வகித்தாா். கணித பட்டதாரி ... மேலும் பார்க்க

பயிா் கழிவுகள் மேலாண்மை பயிற்சி

பென்னாகரம் அருகே அட்மா திட்டத்தின் கீழ் பயிா் கழிவுகள் மேலாண்மை குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் அருகே கலப்பம்பாடியில் நடைபெற்ற பயிற்சிக்கு, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் மைய விஞ்... மேலும் பார்க்க