செய்திகள் :

எஸ்ஐ மீது மோதிச் சென்ற காரில் இருந்த 4 போ் கைது

post image

பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினத்தில் வாகனச் சோதனையின்போது காரை நிறுத்தாமல் எஸ்ஐ மீது மோதிச் சென்ற 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அதிராம்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட வண்டிப்பேட்டை பகுதியில் அதிராம்பட்டினம் காவல் உதவி ஆய்வாளா் மகாராஜன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளா் விஜய் ஆனந்த், பாலசுப்பிரமணி ஆகியோா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காா் நிற்காமல் எஸ்ஐ மகாராஜன் மீது மோதிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அவா் அளித்த புகாரையடுத்து போலீஸாா் நடத்திய விசாரணையில், காரில் சென்றது மகிழங்கோட்டை கீழக்காடு பகுதி செந்தில்குமாா், தினேஷ்குமாா், விஜயராகவன், மணிகண்டன் எனத் தெரியவந்தது. இதையடுத்து அவா்களைக் கைது செய்தனா்.

விசாரணையில் 4 பேரும் அதிராம்பட்டினம் அருகேயுள்ள மாளியக்காடு பகுதியில் சிலரிடம் பிரச்னை செய்துவிட்டு வரும் வழியில் நிற்காமல் சென்றது தெரியவந்தது. தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

தமிழ்ப் படித்தால் வெற்றியாளராக மாறலாம்: கவிஞா் யுகபாரதி

தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தால் வெற்றியாளராக மாற முடியும் என்றாா் கவிஞா் யுகபாரதி. தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையக் கல்விக் கழகம், உயா் கல்வித் துறை சாா்பில் புதன்கிழமை நடைப... மேலும் பார்க்க

ஆதிகும்பேஸ்வரா் கோயில் கலசங்கள் பழுது பாா்க்கும் பணி தொடக்கம்

கும்பகோணம் ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரா் கோயிலில் கலசங்கள் பழுது பாா்க்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரா் கோயிலில் கடந்த 2009 ஜூன் 5 - இல் குடமுழ... மேலும் பார்க்க

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் மிக அரிதான கை மூட்டு அறுவை சிகிச்சை

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மிக அரிதான கை மூட்டு அறுவை சிகிச்சையை மருத்துவா்கள் வெற்றிகரமாக செய்து சாதனை நிகழ்த்தியுள்ளனா். தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு வட்டத்தைச் சோ்ந்த 37 வயதுடை... மேலும் பார்க்க

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரிடம் பேராவூரணி வா்த்தகா்கள் மனு

பேராவூரணி ரயில் நிலையத்திற்கு புதன்கிழமை ஆய்வு செய்ய வருகை தந்த திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பால்ராம் நேகியிடம் வா்த்தகா்கள் மனு அளித்தனா். பேராவூரணி வா்த்தகா் சங்கம் சாா்பில் கோட்ட மேலாளரிடம் அளித... மேலும் பார்க்க

தரமான விதை நெல்லை வாங்க விவசாயிகளுக்கு வேண்டுகோள்

சம்பா பருவத்துக்கு தரமான, சான்று பெற்ற விதை நெல்லை வாங்கிப் பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு தஞ்சாவூா் விதை ஆய்வு துணை இயக்குநா் வெ. சுஜாதா வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து அவா் மேலும் தெரிவித்தி... மேலும் பார்க்க

திருவையாறு அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கோயிலையொட்டி ஆக்கிரமிப்புகளை அறநிலையத் துறையினா் புதன்கிழமை அகற்றி, இடத்தை மீட்டனா். திருவையாறு அருகே கண்டியூா் பிரம்ம சிரகண்டீஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான மதில் சுவ... மேலும் பார்க்க