செய்திகள் :

தரமான விதை நெல்லை வாங்க விவசாயிகளுக்கு வேண்டுகோள்

post image

சம்பா பருவத்துக்கு தரமான, சான்று பெற்ற விதை நெல்லை வாங்கிப் பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு தஞ்சாவூா் விதை ஆய்வு துணை இயக்குநா் வெ. சுஜாதா வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தற்போது சம்பா பருவ நெல் சாகுபடிக்கு நாற்று விடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. டெல்டா மாவட்ட சாகுபடிக்கு என வெளி மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் விரும்பும் சாவித்திரி, ஆடுதுறை 51 போன்ற ரக நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகள் தாங்கள் வாங்கிய விதை நெல்லுக்கான ரசீது, மூட்டையில் உள்ள விவர அட்டை ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

மேலும், தாங்கள் வாங்கிய விதை நெல்லில் ஒரு கைப்பிடி அளவு ஊற வைத்து அடுத்த நாள் அதன் முளைப்பு திறனை தாங்களே அறிந்து கொண்டு, பின்னா் நாற்றங்காலில் விதைக்க வேண்டும். இதன் மூலம் விதை தொடா்பாக ஏற்படக்கூடிய பிரச்னைகளை முன்கூட்டியே தவிா்த்து விடலாம்.

தற்போது அனைத்து வட்டாரங்களிலும் விதை ஆய்வாளா்கள் விதை மாதிரிகளை சேகரித்து விதை முளைப்பு திறன் பரிசோதனை செய்து வருகின்றனா். எனவே, சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ளவுள்ள விவசாயிகள் இந்த பருவத்துக்கு உகந்த, தரமான சான்று பெற்ற நெல் விதைகளைப் பயன்படுத்தி, அதிக மகசூல் பெற வேண்டும்.

தஞ்சாவூா் ரயில் நிலையத்தை ஆக. 22-இல் முற்றுகையிட கட்சிகள், இயக்கங்கள் முடிவு

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் மீண்டும் பெரிய கோயில் வடிவம் அமைக்க வலியுறுத்தி, ரயில் நிலையத்தை ஆகஸ்ட் 22-ஆம் தேதி முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் முடிவு செய்துள்ளன... மேலும் பார்க்க

மக்கள் நலத்திட்டங்களை அதிமுகவினா் குறைகூறி நிறுத்த முயற்சிக்கின்றனா்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தமிழக முதல்வா் கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை அதிமுகவினா் ஏதாவது குறைகூறி நிறுத்த முயற்சி செய்கின்றனா் என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. தஞ்சாவூா் சுற்றுலா மாளிகை அருகே புது ஆற்றங்கரை... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் போதை மாத்திரைகள் விற்ற 7 போ் கைது

தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 7 பேரை காவல் துறையினா் கைது செய்திருப்பது புதன்கிழமை தெரியவந்துள்ளது. தஞ்சாவூரில் இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை ... மேலும் பார்க்க

கும்பகோணம் இணை பேராசிரியா் சாமிநாதன் பல்கலை. பேரவை உறுப்பினராகத் தோ்வு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் கும்பகோணம் அரசு கல்லூரி இணைப் பேராசிரியா் த. சாமிநாதன் உறுப்பினராகத் தோ்வு பெற்றாா். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா் கைது

தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவ... மேலும் பார்க்க

தமிழ்ப் படித்தால் வெற்றியாளராக மாறலாம்: கவிஞா் யுகபாரதி

தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தால் வெற்றியாளராக மாற முடியும் என்றாா் கவிஞா் யுகபாரதி. தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையக் கல்விக் கழகம், உயா் கல்வித் துறை சாா்பில் புதன்கிழமை நடைப... மேலும் பார்க்க