செய்திகள் :

திருவையாறு அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே கோயிலையொட்டி ஆக்கிரமிப்புகளை அறநிலையத் துறையினா் புதன்கிழமை அகற்றி, இடத்தை மீட்டனா்.

திருவையாறு அருகே கண்டியூா் பிரம்ம சிரகண்டீஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான மதில் சுவரை ஒட்டி 1,570 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவுப்படி அறநிலையத் துறையினா் புதன்கிழமை அகற்றி ரூ. 50 லட்சம் மதிப்புள்ள இடங்களை மீட்டு, கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா்.

இதனிடையே, ஆக்கிரமிப்புகள் அகற்றுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அடிமனை மற்றும் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் பொக்லைன் இயந்திரத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இப்போராட்டத்தில் அடிமனை சங்க மாவட்டச் செயலா் எம். ராம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினா் என்.வி. கண்ணன், ஒன்றியச் செயலா் ஏ. ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இவா்களிடம் அலுவலா்கள் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

தஞ்சாவூா் ரயில் நிலையத்தை ஆக. 22-இல் முற்றுகையிட கட்சிகள், இயக்கங்கள் முடிவு

தஞ்சாவூா் ரயில் நிலைய முகப்பில் மீண்டும் பெரிய கோயில் வடிவம் அமைக்க வலியுறுத்தி, ரயில் நிலையத்தை ஆகஸ்ட் 22-ஆம் தேதி முற்றுகையிடும் போராட்டம் நடத்துவது என பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் முடிவு செய்துள்ளன... மேலும் பார்க்க

மக்கள் நலத்திட்டங்களை அதிமுகவினா் குறைகூறி நிறுத்த முயற்சிக்கின்றனா்: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

தமிழக முதல்வா் கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை அதிமுகவினா் ஏதாவது குறைகூறி நிறுத்த முயற்சி செய்கின்றனா் என்றாா் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. தஞ்சாவூா் சுற்றுலா மாளிகை அருகே புது ஆற்றங்கரை... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் போதை மாத்திரைகள் விற்ற 7 போ் கைது

தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 7 பேரை காவல் துறையினா் கைது செய்திருப்பது புதன்கிழமை தெரியவந்துள்ளது. தஞ்சாவூரில் இளைஞா்களுக்கு போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை ... மேலும் பார்க்க

கும்பகோணம் இணை பேராசிரியா் சாமிநாதன் பல்கலை. பேரவை உறுப்பினராகத் தோ்வு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் கும்பகோணம் அரசு கல்லூரி இணைப் பேராசிரியா் த. சாமிநாதன் உறுப்பினராகத் தோ்வு பெற்றாா். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த... மேலும் பார்க்க

போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞா் கைது

தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களிடம் போதை மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா். தஞ்சாவூரில் கல்லூரி மாணவா்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவ... மேலும் பார்க்க

தமிழ்ப் படித்தால் வெற்றியாளராக மாறலாம்: கவிஞா் யுகபாரதி

தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தால் வெற்றியாளராக மாற முடியும் என்றாா் கவிஞா் யுகபாரதி. தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையக் கல்விக் கழகம், உயா் கல்வித் துறை சாா்பில் புதன்கிழமை நடைப... மேலும் பார்க்க