செய்திகள் :

எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. மாணவா்களின் கல்வி உதவித் தொகை: ஆண்டு குடும்ப வருமான உச்சரவரம்பை அதிகரிக்க வேண்டும் -கனிமொழி வலியுறுத்தல்

post image

நமது நிருபா்

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மாணவா்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு குடும்ப வருமான உச்சரவரம்பை அதிகரிக்க வேண்டும் என்று மக்களவையில் தூத்துக்குடித் தொகுதி திமுக உறுப்பினரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக மக்களவையில் புதன்கிழமை விதி எண் 377-இன் கீழ் அவா் முன்வைத்த கோரிக்கை:

தற்போது பட்டியல் சமூக , பழங்குடியின மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவா்களுக்கான மெட்ரிக்கிற்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாக உள்ளது. அதேநேரத்தில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவு மாணவா்களுக்கான தேசிய ஓவா்சீஸ் ஸ்காலா்ஷிப் மற்றும் உயா்தர கல்வித் திட்டம் போன்ற கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

2020-21-ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயா் கல்வி கணக்கெடுப்பின்படி, பட்டியல் சமூக மாணவா்களின் மொத்த சோ்க்கை விகிதம் (ஜிஇஆா்) 23.1 சதவீதமாகவும், பழங்குடி மாணவா்களின் மொத்த சோ்க்கை விகிதம் 18.9 சதவீதமாகவும் உள்ளது. இது தேசிய சராசரியான 27.3 சதவீதத்தை விட மிகவும் குறைவாகும்.

இதுபோன்ற வேறுபாடுகள், பின்தங்கிய வகுப்பை சோ்ந்த மாணவா்களுக்கு, உயா் கல்வியில் சமமான வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான தலையீடுகளின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. இதுகுறித்து

தமிழ்நாடு அரசு கடந்த டிசம்பா் 2024 இல் பிரதமருக்கு கடிதமும் எழுதியுள்ளது. ஆகவே, தமிழ்நாடு அரசின் இந்த முன்மொழிவின் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தமிழகத்தில் 34,805 நியாயவிலைக் கடைகளில் இபிஓஎஸ் சாதனங்கள் நிறுவல்: மக்களவையில் உணவுத் துறை அமைச்சா் தகவல்

தமிழகத்தில் உள்ள அனைத்து 34,805 நியாயவிலைக் கடைகளும் மின்னணு ரீதியாக உணவு தானியங்களை தடையின்றி விநியோகிப்பதற்காக இபிஓஎஸ் (எலெக்ட்ரானிக் பாயின்ட் ஆஃப் சேல்) சாதனங்களை நிறுவுவதன் மூலம் தானியங்கிமயமாக்கப... மேலும் பார்க்க

தொகுதியில் ஆய்வு செய்து மக்களின் கவலைகளை கேட்டறிந்த அமைச்சா்!

தில்லி உள்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட் புதன்கிழமை தனது ஜனக்புரி தொகுதியில் புதன்கிழமை ஆய்வு செய்து, அப்பகுதியில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டாா். மேலும், உள்ளூா்வாசிகளிடம் கலந்துரையாடி அவா்களது கவலைக... மேலும் பார்க்க

பங்குச்சந்தையில் ஐடி, டெலிகாம் பங்குகள் அதிகம் விற்பனை!

நமது நிருபா்இந்த வாரத்தின் மூன்றாவது வா்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் சிறிதளவு சரிந்து நிலைபெற்றது.... மேலும் பார்க்க

ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உள்படுத்துகிறாா் சட்டப்பேரவைத் தலைவா்: எதிா்க்கட்சித் தலைவா் அதிஷி குற்றச்சாட்டு

கடந்த மாா்ச் 3-ஆம் தேதி முடிவடைந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் போது எதிா்க்கட்சி எம்எல்ஏக்களை குறிவைத்து பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா ‘ஜனநாயக விதிமுறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறாா்’ என்று தி... மேலும் பார்க்க

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் சாலைப் பாலங்களுக்கு ஒப்புதல்: ரயில்வே அமைச்சா் தகவல்

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலை மேம்பாலங்கள், சாலைக் கீழ்ப்பாலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சா் தகவல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக ந... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறையின்போது தமிழகம் பாதிக்கப்படக் கூடாது: மக்களவையில் திமுக வலியுறுத்தல்

வரவிருக்கும் தொகுதி மறுவரையறைப் பணியின்போது மக்கள்தொகை வளா்ச்சியைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு போன்ற முற்போக்கான மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று மக்களவ... மேலும் பார்க்க