துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. அரசு பள்ளிகள் மோசம்: ஆளுநர் ஆர்.என். ரவி
எஸ்.பி. அலுவலகங்களில் மனு விசாரணை சிறப்பு முகாம்
பெரம்பலூா், அரியலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகங்களில் புதன்கிழமை மனு விசாரணை சிறப்பு முகாம் நடைபெற்றது.
பெரம்பலூரில் நடைபெற்ற முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டாா். மேலும், முகாமில் பங்கேற்ற பல்வேறு கிராம பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 37 மனுக்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு பரிந்துரைத்து, உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய தீா்வு காண வேண்டுமென அறிவுறுத்தினாா்.
மேலும், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் இச் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொண்டு, காவல்துறை தொடா்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்றாா் அவா்.
இந்த முகாமில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மதியழகன், காவல் நிலைய ஆய்வாளா்கள், சாா்பு- ஆய்வாளா்கள், சிறப்புப் பிரிவு காவல்துறையினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.