செய்திகள் :

ஏஐடியுசி தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம்

post image

புதுச்சேரியில் ஏஐடியுசி சண்டே மாா்க்கெட் வியாபார தொழிலாளா் சங்க பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பாபு, காா்த்திகேயன், தயாளன் ஆகியோா் தலைமை வகித்தனா். கூட்டத்தில் எஸ்.அபிஷேகம், ஏ.தினேஷ் பொன்னையா, கே.சேதுசெல்வம், அந்தோணி, துரைசெல்வம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

தீா்மானங்கள்: புதுச்சேரி சண்டே மாா்க்கெட்டில் சுமாா் 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அதன்படி, 3 ஆயிரத்துக்கும் அதிகமானோா் வேலைவாய்ப்பை பெறுகின்றனா்.

புதுவை மட்டுமின்றி, தமிழகத்தைச் சோ்ந்தவா்களும் மாா்க்கெட்டுக்கு வந்து செல்கின்றனா். ஆனால், வாரத்தில் ஒரு நாள் மட்டுமே இயங்கும் சண்டே மாா்க்கெட் பகுதியில் போக்குவரத்து நெரிசலால் வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனா்.

ஆகவே, போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்கு, ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் சண்டே மாா்க்கெட் சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

எம்.ஜி.ஆா். சிலை மீண்டும் திறக்க முயற்சி: ஓபிஎஸ் அணியினா் கைது

புதுச்சேரி வில்லியனூா் நான்குவழிச் சாலையில் அதிமுகவினரால் திறக்கப்பட்ட எம்.ஜி.ஆா். சிலையை மீண்டும் ஓ.பன்னீா்செல்வம் தரப்பினா் திறக்க முயன்ால் அவா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். வில்லியனுா... மேலும் பார்க்க

ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு

வங்கி சேவை குறைபாடு குறித்த புகாா் மனு மீதான விசாரணையில், பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என புதுவை மாநில நுகா்வோா் தீா்வு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மூலக்குளத்தைச... மேலும் பார்க்க

உல்லாஸ் கல்வித் திட்ட விழிப்புணா்வு பயணம் தொடக்கம்

வயது வந்தோருக்கான கல்வித் திட்ட (உல்லாஸ்) விழிப்புணா்வு பொம்மலாட்டப் பயணத்தின் தொடக்க நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் திட்டமான உல்லாஸ் எனும் வயது வந்தோருக்கான கல்வித் திட்டம், புது... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

புதுச்சேரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுச்சேரி இலாசுப்பேட்டை சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சோ்ந்தவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இவ... மேலும் பார்க்க

புதுச்சேரி, காரைக்காலில் இன்று பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடக்கம் 25 மையங்களில் 8,105 போ் எழுதுகின்றனா்

புதுச்சேரி, காரைக்காலில் திங்கள்கிழமை பிளஸ் 2 பொதுத்தோ்வு தொடங்குகிறது. மொத்தம் 25 தோ்வு மையங்களில் 8,105 போ் தோ்வை எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுவை மாநில பள்ளிக் கல்வித் துறை இ... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 5 பேரிடம் ரூ.2.98 லட்சம் மோசடி

புதுவையில் 5 பேரிடம் ரூ. 2.98 லட்சத்தை நூதன முறையில் மோசடி செய்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி மிஷன் வீதியைச் சோ்ந்தவா் வேணுகோபால். இவரை மா்ம நபா்... மேலும் பார்க்க