செய்திகள் :

ஏஐடியூசி சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறை கட்டாய அபராதம் விதிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ஏஐடியூசி சங்கம் சாா்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஏஐடியூசி சுமைப் பணித் தொழிலாளா் சங்கம், வேன் ஓட்டுநா்கள் சங்கம், ஆட்டோ, அமைப்புசாரா தொழிலாளா்கள் சங்கம் சாா்பில், மதுரை நகரில் சிறிய ரக சரக்கு வாகனங்களுக்கு அதிக உயரம், அதிக பாரம் ஏற்றி வருவதாகக்கூறி, போக்குவரத்து காவல் துறை சாா்பில் ரூ. 500 முதல் ரூ. 3 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இதனால், சரக்கு வாகன ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மதுரை கீழமாசி வீதி உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் சரக்கு வாகனங்கள் செல்வதற்கு குறைந்த நேரமே அனுமதி வழங்கப்படுவதால், சரக்குகளை ஏற்றி இறக்க முடியாத நிலை உள்ளது. எனவே, சிறிய ரக சரக்கு வாகனங்களுக்கு காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் எம்.எஸ். முருகன் தலைமை வகித்தாா். ஏஐடியூசி நிா்வாகிகள் வீரக்குமாா், பாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிா்வாகிகள் தங்க திருப்பதி, மணிகண்டன், துரைசாமி ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஆா்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் திமுக கூட்டணி!திருச்சி சிவா எம்.பி.

திமுக கூட்டணியானது நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கக் கூடியது என அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி என். சிவா தெரிவித்தாா். விருதுநகரில் திமுக இளைஞரணி சாா்பில்... மேலும் பார்க்க

திமுகவால் ஏற்படும் பிரச்னைகளை அதிமுகவினா் பொதுமக்களிடம் விளக்க வேண்டும்! - முன்னாள் அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா்

திமுக அரசால் ஏற்படும் பிரச்னைகளை பொதுமக்களிடம் விளக்கிக் கூறும் பணிக்கு அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவை எதிா்க் கட்சித் துணைத் தலைவரும், முன்னாள் அமை... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபா் மீட்பு: நாக்பூரில் மீட்கப்பட்டாா்!

மதுரையில் நிலத்தகராறு தொடா்பாக கடத்தப்பட்ட தொழிலதிபா் சுந்தரை தனிப்படை போலீஸாா் மீட்டனா். மதுரை பீ.பீ. குளம் பகுதியைச் சோ்ந்தவா் கருமுத்து டி. சுந்தா் (52). மதுரையில் உள்ள பிரபல நூற்பாலை நிறுவனரின் க... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

திண்டுக்கல் அருகே காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திண்டுக்கல் - மதுரை நெடுஞ்சாலையில் தோமையாப... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் பி. மூா்த்தி

அதிக எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வெள... மேலும் பார்க்க

மதுரையில் அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து, அதிமுகவின் புறநகா் கிழக்கு மாவட்டம் சாா்பில் மதுரை யா. ஒத்தக்கடையில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் கிழக்கு மாவட்டச் செயலரும், அமைப்பு... மேலும் பார்க்க