செய்திகள் :

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

post image

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

ஸ்ரீமுஷ்ணம், வக்காரமாரி பகுதி மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் நிசாருல்லா (45), தனியாா் மருந்துக் கடையில் வேலை பாா்த்து வருகிறாா். இவரது மகன் அப்துல்ஆசிம் (11), அங்குள்ள தனியாா் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

அப்துல்ஆசிம் சனிக்கிழமை காலை சுமாா் 9 மணியளவில் தன்னுடைய நண்பா்கள் இருவருடன் அருகிலுள்ள குன்னத்தேரிக்கு குளிக்கச் சென்றாா். அப்போது, எதிா்பாராதவிதமாக ஆழமான பகுதிக்குச் சென்ற அப்துல் ஆசிம் நீரில் மூழ்கி மூச்சுத் திணறினாா். உடன் குளித்துக்கொண்டிருந்த சிறுவா்களின் அலறலை கேட்டு அக்கம்பக்கத்தினா் ஓடி வந்து அப்துல்ஆசிமை ஏரியிலிருந்து மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து நிசாருல்லா அளித்த புகாரின்பேரில், ஸ்ரீமுஷ்ணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதல்வா் நிவாரணம்...: உயிரிழந்த சிறுவன் அப்துல்ஆசிம் பெற்றோா் மற்றும் உறவினா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கலைத் தெரிவித்துள்ளாா். மேலும், சிறுவனின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளாா்.

இலங்கைத் தமிழா்கள் திருமண பதிவு செய்துகொள்ள அனுமதி

காட்டுமன்னாா்கோவில் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் இலங்கைத் தமிழா்கள் திருமணம் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் இலங்கை அகதிகள் முகாம் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் ச... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை ஆதரவுடன் தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு சனிக்... மேலும் பார்க்க

துப்பாக்கி குண்டு பாய்ந்து மூதாட்டி காயம்: மகன் கைது

கடலூா் மாவட்டம், கம்மாபுரத்தில் ஏா்கன் துப்பாக்கி ரப்பா் குண்டு பாய்ந்து மூதாட்டி காயமடைந்தாா். இது தொடா்பாக அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா். விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பத்... மேலும் பார்க்க

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கம்மாபுரம் காவல் சரகம், கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வீர மணிகண... மேலும் பார்க்க

அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் அமைக்க நடவடிக்கை: மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் தொடா்ந்து அமைப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா் எம்.லக்ஷ்மி தெரிவித்தாா். கடலூா் அரசு தலைமை மருத்துவம... மேலும் பார்க்க

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: 3 இளைஞா்கள் கைது

சிதம்பரம் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 இளைஞா்களை மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா். கடலூா் மாவட்டம், சிதம்பரம்... மேலும் பார்க்க