செய்திகள் :

ஏற்காடு: அரசு பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு... ஆசிரியர் போக்சோவில் கைது!

post image

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில், கள்ளக்குறிச்சி மாவட்டம், வெள்ளிமலை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி அரசு விடுதியில் தங்கி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளியில் தற்காலிக ஆசிரியராக சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் நெய்ய மலை பகுதியை சேர்ந்த இளைய கண்ணு என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அப்பள்ளியில் பத்தாம், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவரான வெள்ளி மலையை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவி பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார். அதில், தன்னிடமும் தனது தோழிகள் 4 பேரிடமும், ஆசிரியர் இளைய கண்ணு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்.

பாலியல் தொந்தரவு

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இப்புகார் பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் கல்வித்துறை அதிகாரிகளுக்கும், சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தார். அதன் பேரில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் அப்பள்ளியில் சென்று மாணவியரிடம் விசாரித்தனர். பின்னர் ஏற்காடு காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார். புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உமா பிரியதர்ஷினி தலைமையிலான போலீஸார் சென்று மாணவியரிடம் விசாரணை நடத்தினர். அதில், பாதிக்கப்பட்ட மாணவி உட்பட ஐந்து மாணவிகளுக்கு ஆசிரியர் இளைய கண்ணு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். ஆனால் பெற்றோரை பிரிந்து விடுதியில் தங்கியிருந்து படித்து வருவதால் மாணவிகளை வெளியில் சொல்லாமல் இருந்து வந்தது தெரிய வந்தது. இதை எடுத்து ஆசிரியர் இளைய கண்ணு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ஆசிரியர் இளைய கண்ணுவை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இப் புகார் பற்றி பள்ளியின் தலைமை ஆசிரியர் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நலக்குழு அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தார். அதன் பெயரில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் அப்பள்ளியில் சென்று மாணவியரிடம் விசாரித்தனர். பின்னர் ஏற்காடு காவல் நிலையத்தில் மாணவி புகார் அளித்தார்.

கைது

புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உமா பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் சென்று மாணவியரிடம் விசாரணை நடத்தினர். அதில் பாதிக்கப்பட்ட மாணவி உட்பட ஐந்து மாணவிகளுக்கு ஆசிரியர் இளைய கண்ணு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். பெற்றோரை பிரிந்து விடுதியில் தங்கி மாணவிகள் படித்து வருவதால் அவர்கள் வெளியில் சொல்லாமல் இருந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆசிரியர் இளைய கண்ணு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ஆசிரியர் இளைய கண்ணுவை நேற்று போலீஸார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை: பாஜக பிரமுகர் மீது இளம்பெண் பாலியல் புகார்; விசாரணையில் வெளியான பகீர் பின்னணி

சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவர், சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார்.அதில், ``நான் தற்போது ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறேன். ... மேலும் பார்க்க

`வலித் தெரியாமல் அவன் வாழ்நாள் முடிந்துவிடக் கூடாது!’ - ரயில் கொடூரன் மீது கொதிக்கும் பெண்ணின் கணவர்

இந்தக் கட்டுரையை நீங்கள் படித்துக்கொண்டிருக்கும் நொடியிலும் ஏதோவொரு ஒரு மூலையில் பாலியல் அத்துமீறலில் யாரேனும் ஒரு சகோதாரி பாதிக்கப்பட்டுகொண்டிருக்கலாம் என்கிற அச்ச சூழல் உருவாகியிருக்கிறது.6-2-2025 அ... மேலும் பார்க்க

திருவாரூர்: 20 நாட்களில் 2 போலீஸார் தற்கொலை முயற்சி... நீடாமங்கலம் காவல் நிலையத்தில் என்ன நடக்கிறது?

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார்.போலீஸானஇவர் கடந்த ஏழு ஆண்டுகளாகத் திருவாரூர் மாவட்ட காவல் நிலையங்களில் பணியாற்றி வருகிறார். தற்போது, நீடாமங்கலம் காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணிபுரிகிறார். இந... மேலும் பார்க்க

திருப்பதி லட்டு விவகாரம்: போலி ஆவணம், போலி நெய்... 4 பேர் கைது.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

ஆந்திர மாநிலத்தில், கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின் போது நியமிக்கப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு லட்டு தயாரிப்புக்காக கொள்முதல் செய்த நெய்யில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது. அறங்காவலர... மேலும் பார்க்க

விருதுநகர்: 40 பவுன் திருட்டு நகை, துப்பாக்கி... வசமாகச் சிக்கிய காவலர்; மர்மநபருக்கு வலைவீச்சு

விருதுநகர் மாவட்டம் வச்சகாரப்பட்டி அருகே நகை, கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேக நபர் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீஸிடம் விசாரித்தோம்.அப்போது நம்மிடம் ... மேலும் பார்க்க

ஊட்டி: கடமானை வேட்டையாடி, உப்புக் கண்டம் போட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..! என்ன நடந்தது?

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உள்பட்ட பகுதியில் கடமானை வேட்டையாடி அதன் இறைச்சியை பதப்படுத்த உப்புக் கண்டம் போட்டு வருவதாக வனத்துறையினருக்கு சிலர் தகவல் தெரிவித்துள... மேலும் பார்க்க