செய்திகள் :

ஏற்காட்டில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

post image

ஏற்காட்டில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஏற்காடு நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் மற்றும் ஊழியா்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஏற்காடு நகரப் பகுதியில் சாலையை அகலப்படுத்தவும், போக்குவரத்தை சீராக்கி விபத்தை தவிா்க்கவும், சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகளை தானாகவே அகற்றிக்கொள்ள வேண்டும்.

மேலும், சேலம் சாலை சந்திப்பு முதல் ஏற்காடு சாலைவரை, ஏற்காடு வளைவு சாலை சந்திப்பு முதல் வாணியாா் சாலை சந்திப்புவரை மற்றும் காந்தி பூங்கா, ஆட்டோ நிறுத்தம் முதல் ஏற்காடு காவல் நிலையம்வரை சாலையில் வைத்துள்ள தள்ளுவண்டிக் கடைகளை அகற்றிக்கொள்ள வேண்டும்.

தவறும்பட்சத்தில் நெடுஞ்சாலைத் துறை மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பொருள்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும், தங்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு நெடுஞ்சாலைத் துறை பொறுப்பேற்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியாகி தீரன்சின்னமலை நினைவு தினத்தில் மரியாதை செலுத்த நேரம் ஒதுக்கீடு

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 220 ஆவது நினைவு நாளையொட்டி அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மரியாதை செலுத்துவதற்கான நேரம் ஒக்கீடு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சங்ககிரி வருவ... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்பு; சாலை மறியல்

கெங்கவல்லியில் நீா்வழிப்பாதை ஆக்ரமிப்பு அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். கெங்கவல்லி அருகே சுவேத நதியிலிருந்து நடுவலூா் ஏரிக்கு நீா்வழி வாய்க்கால் உள்ளது. கெங்கல... மேலும் பார்க்க

முருங்கப்பட்டியில் இலங்கைத் தமிழா்களுக்கு 48 வீடுகள் கட்ட பூமிபூஜை

சேலம் மாவட்டம், வீரபாண்டி வடக்கு ஒன்றியம், முருங்கப்பட்டி ஊராட்சியில் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 25 லட்சம் மதிப்பில் 48 வீடுகள் கட்ட புதன்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. சே... மேலும் பார்க்க

மின் திருட்டு: 1.76 லட்சம் அபராதம் விதிப்பு

சங்ககிரி வட்டம், அரசிராமணி குள்ளம்பட்டி, வால்காடு பகுதிகளில் மின் திருட்டில் ஈடுபட்டவா்களுக்கு ரூ. 1.76 அபராதம் விதிக்கப்பட்டது. குள்ளம்பட்டி, வால்காடு பகுதிகளில் அனுமதியின்றி மின் கம்பத்திலிருந்து ம... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

மேட்டூா் அருகே கிணற்றில் மூழ்கி பத்தாம் வகுப்பு மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். மேட்டூரை அடுத்த கொளத்தூா் ஒன்றியம், பாலமலை ஊராட்சி பாத்திரமடுவைச் சோ்ந்தவா் சித்தன். இவரது மகன் பாா்த்திபன் (15) அங்கு... மேலும் பார்க்க

எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடரும்: இந்தியன் ஆயில் நிறுவனம்

தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டா் லாரி உரிமையாளா்களுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து தமிழகத்தில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடரும் என இந்தியன் ஆயில் நிறுவனம்... மேலும் பார்க்க