செய்திகள் :

ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்வு!

post image

நேற்று பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் முடிந்த நிலையில் இன்றும்(வியாழக்கிழமை) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,456.67 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 395.05 புள்ளிகள் அதிகரித்து 80,962.76 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை 900 புள்ளிகள் வரை சென்செக்ஸ் உயர்ந்தது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 106.40 புள்ளிகள் உயர்ந்து 24,821.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நேற்று(செப். 3 ) சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)யில் மாற்றங்களை மத்திய அரசு அறிவித்தது. முன்னதாக இருந்த 12 சதவீதம், 28 சதவீதம் வரிகளை ரத்து செய்து 5%, 18% வரி மட்டும் பயன்பாட்டில் இருக்கும் என்று அறிவித்துள்ளது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் வரி குறைக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி வரியில் மாற்றம் பங்குச்சந்தையில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

துறைகளில், நிஃப்டி ஆட்டோ குறியீடு 2.3 சதவீதம் உயர்ந்தது. அதைத் தொடர்ந்து நிஃப்டி எஃப்எம்சிஜி குறியீடு (1.7 சதவீதம்), ரியாலிட்டி (1.3 சதவீதம்), நிதி சேவைகள் (1 சதவீதம்) உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.

எம் & எம், ஈச்சர் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், ட்ரெண்ட், பஜாஜ் பின்சர்வ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்துள்ளன.

டாடா நுகர்வோர் தயாரிப்பு, ஓஎன்ஜிசி, இண்டஸ்இண்ட் வங்கி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

Stock Market Updates: Sensex gains 400 pts, Nifty near 24,800

உற்பத்தித் துறையில் 15 ஆண்டுகள் காணாத வளா்ச்சி

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் முந்தைய 15 ண்டுகளில் இல்லாத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இதுகுறித்து ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

கடன் வட்டியைக் குறைத்த கரூர் வைஸ்யா வங்கி!

புதுதில்லி: தனியார் துறையைச் சேர்ந்த கரூர் வைஸ்யா வங்கி வெள்ளிக்கிழமையன்று, அனைத்து தவணைக் காலங்களிலும் நிதி அடிப்படையிலான கடன் விகிதம் (MCLR) 10 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.ஆட்ட... மேலும் பார்க்க

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து ரூ.88.27 ஆக நிறைவு!

மும்பை: அந்நிய நிதி தொடந்து வெளியேற்றம் மற்றும் இந்தியாவிற்கு அமெரிக்க கூடுதலாக வரிகள் விதிக்கும் என்ற அச்சம் காரணமாக, இன்றைய வர்த்தக அமர்வில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 15 காசுகள் சரிந்த... மேலும் பார்க்க

நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி! மாற்றமின்றி நிறைவடைந்த பங்குச் சந்தை!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோ மற்றும் எண்ணெய் & எரிவாயு பங்குகள் உயர்ந்த நிலையில் ஐடி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளின் சரிந்த நிலையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முந்தைய முடிவில் இருந்து மாற்ற... மேலும் பார்க்க

இந்தியன் மோட்டார்சைக்கிளின் ஸ்கவுட் பைக் அறிமுகம்! ரூ.12.99 லட்சத்தில்..!

இந்தியன் மோட்டார்சைக்கிளின் ஸ்கவுட் லைன் - அப் பைக் வரிசைகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்குகள் 8 விதமான மாடல்களில் வெளியாகியுள்ளன. 100 க்கும் மேற்பட்ட அக்ஸசரிஸ்களுடன், 3 விதமான ரிம... மேலும் பார்க்க

பங்குச்சந்தைக்கு சாதகமாக அமைந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் லாபத்துடன் முடிவடைந்தது. உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்நிலைய... மேலும் பார்க்க