செய்திகள் :

ஏ.ஆர். ரஹ்மானுடன் எல். முருகன் சந்திப்பு!

post image

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானை மத்திய இணையமைச்சர் எல். முருகன் நேரில் சந்தித்துப் பேசினார்.

சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேவுள்ள அய்யர்கண்டிகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிரம்மாண்ட ஸ்டுடியோ கட்டியுள்ளார்.

இந்த ஸ்டுடியோவை நேரில் பார்வையிட வருமாறு மத்திய இணையமைச்சர் எல். முருகனுக்கு ஏ.ஆர். ரஹ்மான் விடுத்த அழைப்பின்பேரில் ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் சென்றதாகக் கூறப்படுகிறது.

மேலும், இந்த சந்திப்பின்போது அரசியல் பேசப்படவில்லை என்றும், அண்மையில் மத்திய அரசின் குறும்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து கொடுத்ததற்காக நன்றி தெரிவிக்கச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ஏ.ஆர். ரஹ்மானை சந்தித்தது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் எல். முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

”உலகளவில் சிறந்த தொழில்நுட்பங்களுடன் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய ஸ்டுடியோவை ஏ.ஆர். ரஹ்மான் கட்டியுள்ளார். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் என்ற முறையில் நேரில் சென்று பார்த்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தில்லியில் குடியரசுத் துணைத் தலைவரை நடிகை மீனா சந்தித்தது பேசுபொருளான நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மத்திய இணையமைச்சர் எல். முருகனின் சந்திப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : கர்நாடக முதல்வர் மாற்றமா? விமர்சனத்துக்கு உள்ளான கார்கே பதில்!

Union Minister of State L. Murugan met and spoke to music composer A.R. Rahman in person.

இயற்கை - ஹோமியோபதி மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்

சென்னை: இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறைக்கு புதிதாக தோ்வு செய்யப்பட்ட 115 உதவி மருத்துவா்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினாா். இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செ... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி முதன்மைத் தோ்வு ஊக்கத் தொகை: விண்ணப்ப காலம் நீட்டிப்பு

சென்னை: குடிமைப்பணி முதன்மைத் தோ்வு எழுதவுள்ள தோ்வா்கள், ஊக்கத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க

பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்த்த வழக்கில் சிக்கியவரின் சொத்து முடக்கம்

சென்னை: தமிழகத்தில் பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சோ்த்த வழக்கில் சிக்கிய நபரின் சொத்துகளை என்ஐஏ (தேசிய புலனாய்வு முகமை) முடக்கியது. சென்னையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு யூ-டியூப் சேனலில் தடை செய்யப்ப... மேலும் பார்க்க

கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகை: நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு

சென்னை: கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்க நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுலா மற்றும் சா்க்கரை உற்பத்தித் துறை அமைச்சா் இரா.ராஜேந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க

பெரிய வணிக நிறுவனங்களுக்கு மின் கட்டண உயர்வு!

பெரிய தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 3.16 சதவீதத்திற்கு மிகாமல், மின் கட்டண உயர்த்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று (ஜூன் 30) தெரிவித்துள்ளார். சிறு வணிகர... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்க... மேலும் பார்க்க