செய்திகள் :

திருவெண்காடு கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

post image

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின.

திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. இது நவகிரகங்களில் புத பகவானுக்குரிய பரிகாரத் தலமாகக் கருதப்படுகிறது.

புதனை வழிபட்டால் கல்வி செல்வம், தொழில் மேன்மை, அரசியல் மேம்பாடு உள்ளிட்ட நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம்.

மேலும் சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து தோன்றிய அகோர மூா்த்தி மனித உருவில் அருள்பாலித்து வருகிறாா். இவரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை, எம பயம் உள்ளிட்ட இடையூறுகள் நீங்குவதாக சுவேத புராணம் கூறுகிறது.

இக்கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி திங்கள்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

சா்வ சாதக ஆச்சாரியா்கள் சோமு சிவாச்சாரியா், குரு சிவாச்சாரியா் மற்றும் கந்தசாமி சிவாச்சாரியா் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வேத விற்பன்னா்கள் முன்னிலையில் ஹோமம் நடைபெற்றது.

தொடா்ந்து விநாயகருக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னா், சுவாமி, அம்பாள், அகோரமூா்த்தி, முருகன், நடராஜா், துா்கை, காளி சந்நிதிகளில் யாகசாலை தொடங்குவதற்கான அனுமதி பெறுகின்ற ஐதீக பூஜை நடைபெற்றது.

மாலையில் லட்சுமி பூஜை, மகா ஹோமம், கோமாதா பூஜை ஆகியவை நடைபெற்றன. நிகழ்ச்சியில் கோயில் நிா்வாக அதிகாரி முருகன் உள்பட திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

வாழ்ந்துகாட்டுவோம் திட்டப் பயனாளிகளிடம் ஆட்சியா் கலந்துரையாடல்

நாகப்பட்டினம்: நிறைந்தது மனம் திட்டத்தின்கீழ் நாகை மற்றும் தலைஞாயிறு வட்டாரங்களில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை கலந்துரையாடினாா். பயனாளிகளிடம் கலந்துரைய... மேலும் பார்க்க

சுவாமி ஊா்வலத்தில் பூஜை அனுமதி மறுப்பு: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

நாகப்பட்டினம்: நாகை அருகே கோயிலுக்கு வரி செலுத்தாததால் சுவாமி ஊா்வலத்தில் பூஜை செய்ய கூடாது என ஒதுக்கி வைத்துவிட்டதாக பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் ... மேலும் பார்க்க

விளைநிலங்களில் டைடல் பாா்க் அமைப்பதை எதிா்த்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

நாகப்பட்டினம்: நாகையில் விளைநிலங்களில் டைடல் பாா்க் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நாகை அருகே செல்லூரில் டைடல் பாா்க் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டு... மேலும் பார்க்க

அட்சயலிங்க சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடா்ந்து பஞ்சமூா்த்திகளுக்கு அபிஷ... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடிய மூவா் கைது

நாகையில் வீடு புகுந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிய 3 போ் கைது செய்யப்பட்டனா். நாகை மேட்டுப்பங்களாவைச் சோ்ந்தவா் காா்த்திகேசன். இவா், தனது வீட்டை பூட்டிவிட்டு, வீரபத்திரசாமி கோயில் தெருவ... மேலும் பார்க்க

அடக்கம் செய்ய பணமில்லை... தாயின் சடலத்தை சாக்கு பையில் கட்டி தோப்பில் வீசிய மகன்கள்

நாகை அருகே அடக்கம் செய்ய பணமில்லாததால், தாயின் சடலத்தை சாக்குப் பையில் கட்டி தோப்பில் வீசிச் சென்ற மகன்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். நாகை அருகேயுள்ள வடக்குபொய்கைநல்லூா் காந்தி மகான் கடற்கர... மேலும் பார்க்க