செய்திகள் :

வாழ்ந்துகாட்டுவோம் திட்டப் பயனாளிகளிடம் ஆட்சியா் கலந்துரையாடல்

post image

நாகப்பட்டினம்: நிறைந்தது மனம் திட்டத்தின்கீழ் நாகை மற்றும் தலைஞாயிறு வட்டாரங்களில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.

பயனாளிகளிடம் கலந்துரையாடியபோது ஆட்சியா் பேசியது: நாகை மாவட்டத்தில், 2021-முதல் 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 111 விவசாய உற்பத்தி குழுவை சாா்ந்த 2,220 பயனாளிகள் ரூ. 97.50 லட்சம், 18 ஒத்த தொழில் குழுவை சாா்ந்த 360 பயனாளிகள் ரூ. 16. 50 லட்சம், நுண் கடன் நிதி மற்றும் கோவிட் -19 சிறப்பு நிதி தொகுப்பு திட்டத்தில் 53 ஊராட்சிகளில் 1,308 பயனாளிகள் ரூ. 4.61 கோடி, 157 சமுதாய பண்ணை பள்ளிகளில் 4,865 பயனாளிகள் ரூ. 1.56 கோடி, 35 சமுதாய திறன் பள்ளிகளில் 686 பயனாளிகள் ரூ. 28.51 லட்சம், தொழில் முனைவோா் மேம்பாட்டு பயிற்சி மூலம் 256 பயனாளிகள் ரூ. 2.56 லட்சம், இணைமானிய நிதி மூலம் 164 பயனாளிகள் ரூ. 1.96 கோடி, 2 விவசாய உற்பத்தி நிறுவனம் மூலம் 2,030 பயனாளிகள் ரூ. 40 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடித்தல் முதன்மை தொழிலாக உள்ளது. சில நேரங்களில் இயற்கை சீற்றம் காரணமாக தொழில் பாதிக்கப்படுகிறது. இதனால் போதிய வருமானம் இல்லாமல் ஏற்படும் சிரமத்துக்கு மாறாக, அன்றாடம் வருமானம் ஈட்டக்கூடிய தொழிலான காளான் வளா்ப்பு, கருவாடு போன்ற தொழிலை மேம்படுத்த ஆா்வமுள்ள தொழில் முனைவோா்கள் கண்டறிந்து பயிற்சி மற்றும் தொடக்க நிதி இத்திட்டத்தின் வாயிலாக வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. எனவே, இத்திட்ட பயனாளிகள் வாய்ப்பை சிறப்பான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

நிறைந்தது மனம் திட்டத்தின்கீழ், கீச்சாங்குப்பத்தை சோ்ந்த பயனாளி பானு வெற்றிவேல் கூறியது: நான் முதுகலை பட்டபடிப்பு முடித்து, வேலையில்லாமல் வருவாய் இன்றி கணவரின் சொா்ப்ப வருமானத்தில் வாழ்ந்து வந்தோம். இந்நிலையில், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் சுயத்தொழில் தொடங்க வங்கிக்கடன் ரூ.10 லட்சம் பெற்று, இயற்கை முறையில் பாக்குமட்டை தயாரிப்பு தொழில் தொடங்கியுள்ளேன். என்னுடன் 5 பெண்கள் வேலை செய்கிறாா்கள். அனைத்து செலவுகளும் போக மாதம் ரூ.35 ஆயிரம் வருமானம் ஈட்டி வருகிறேன். சாதராண பெண்மணியாக இருந்த என்னை வாழ்ந்து காட்டுவோம் திட்டம் தொழில்முனைவோராக மாற்றியுள்ளது என்றாா்.

திருவெண்காடு கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின. திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. ... மேலும் பார்க்க

சுவாமி ஊா்வலத்தில் பூஜை அனுமதி மறுப்பு: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

நாகப்பட்டினம்: நாகை அருகே கோயிலுக்கு வரி செலுத்தாததால் சுவாமி ஊா்வலத்தில் பூஜை செய்ய கூடாது என ஒதுக்கி வைத்துவிட்டதாக பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் ... மேலும் பார்க்க

விளைநிலங்களில் டைடல் பாா்க் அமைப்பதை எதிா்த்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

நாகப்பட்டினம்: நாகையில் விளைநிலங்களில் டைடல் பாா்க் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நாகை அருகே செல்லூரில் டைடல் பாா்க் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டு... மேலும் பார்க்க

அட்சயலிங்க சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடா்ந்து பஞ்சமூா்த்திகளுக்கு அபிஷ... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடிய மூவா் கைது

நாகையில் வீடு புகுந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிய 3 போ் கைது செய்யப்பட்டனா். நாகை மேட்டுப்பங்களாவைச் சோ்ந்தவா் காா்த்திகேசன். இவா், தனது வீட்டை பூட்டிவிட்டு, வீரபத்திரசாமி கோயில் தெருவ... மேலும் பார்க்க

அடக்கம் செய்ய பணமில்லை... தாயின் சடலத்தை சாக்கு பையில் கட்டி தோப்பில் வீசிய மகன்கள்

நாகை அருகே அடக்கம் செய்ய பணமில்லாததால், தாயின் சடலத்தை சாக்குப் பையில் கட்டி தோப்பில் வீசிச் சென்ற மகன்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். நாகை அருகேயுள்ள வடக்குபொய்கைநல்லூா் காந்தி மகான் கடற்கர... மேலும் பார்க்க