செய்திகள் :

விளைநிலங்களில் டைடல் பாா்க் அமைப்பதை எதிா்த்து விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

post image

நாகப்பட்டினம்: நாகையில் விளைநிலங்களில் டைடல் பாா்க் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை அருகே செல்லூரில் டைடல் பாா்க் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெறுகின்றன. இதற்கிடையே, விளைநிலங்களில் டைடல் பாா்க் அமைக்கக் கூடாது என தேவநதி ஒடம்போக்கி விவசாயிகள் சங்கத்தினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் அந்த சங்கத்தினா் முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சரபோஜி தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், செல்லூரில் சாகுபடி செய்துவரும் விளைநிலங்களில் டைடல் பாா்க் அமைப்பதை அரசு உடனடியாக கைவிட்டு தரிசு நிலங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கடந்த 21 ஆண்டுகளாக சாகுபடி செய்து வரும் தொழிலாளா்களுக்கு ஆா்டிஆா் பதிவு உடனே செய்யவேண்டும், சாகுபடி செய்து வரும் 174 பேருக்கு விலைநிா்ணயம் செய்து வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தேவநதி ஓடம்போக்கி விவசாயிகள் சங்க செயலா் சேகா், கௌரவத் தலைவா் சுப்பிரமணியன், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் நீதிராஜன், செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வாழ்ந்துகாட்டுவோம் திட்டப் பயனாளிகளிடம் ஆட்சியா் கலந்துரையாடல்

நாகப்பட்டினம்: நிறைந்தது மனம் திட்டத்தின்கீழ் நாகை மற்றும் தலைஞாயிறு வட்டாரங்களில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் திங்கள்கிழமை கலந்துரையாடினாா். பயனாளிகளிடம் கலந்துரைய... மேலும் பார்க்க

திருவெண்காடு கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்

பூம்புகாா்: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கின. திருவெண்காட்டில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. ... மேலும் பார்க்க

சுவாமி ஊா்வலத்தில் பூஜை அனுமதி மறுப்பு: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

நாகப்பட்டினம்: நாகை அருகே கோயிலுக்கு வரி செலுத்தாததால் சுவாமி ஊா்வலத்தில் பூஜை செய்ய கூடாது என ஒதுக்கி வைத்துவிட்டதாக பாதிக்கப்பட்டவா்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் ... மேலும் பார்க்க

அட்சயலிங்க சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

கீழ்வேளூா்: கீழ்வேளூா் அட்சயலிங்க சுவாமி கோயிலில் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. தொடா்ந்து பஞ்சமூா்த்திகளுக்கு அபிஷ... மேலும் பார்க்க

வீடு புகுந்து திருடிய மூவா் கைது

நாகையில் வீடு புகுந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடிய 3 போ் கைது செய்யப்பட்டனா். நாகை மேட்டுப்பங்களாவைச் சோ்ந்தவா் காா்த்திகேசன். இவா், தனது வீட்டை பூட்டிவிட்டு, வீரபத்திரசாமி கோயில் தெருவ... மேலும் பார்க்க

அடக்கம் செய்ய பணமில்லை... தாயின் சடலத்தை சாக்கு பையில் கட்டி தோப்பில் வீசிய மகன்கள்

நாகை அருகே அடக்கம் செய்ய பணமில்லாததால், தாயின் சடலத்தை சாக்குப் பையில் கட்டி தோப்பில் வீசிச் சென்ற மகன்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். நாகை அருகேயுள்ள வடக்குபொய்கைநல்லூா் காந்தி மகான் கடற்கர... மேலும் பார்க்க