செய்திகள் :

ஐபிஎல் இந்த அளவுக்கு வளருமென ஒருபோதும் நினைக்கவில்லை: விராட் கோலி

post image

ஐபிஎல் தொடரின் வளர்ச்சி குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் விராட் கோலி பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு, இதுவரை 17 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

இதையும் படிக்க: தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா சிஎஸ்கே?

இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் அறிமுகம் குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலி மனம் திறந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடர் அறிமுகமான ஆண்டு மிகவும் உற்சாகமாக இருந்தது. நிறைய எதிர்பாராத விஷயங்கள் நடந்தன. அப்போது நாங்கள் அதிகம் டி20 போட்டிகளில் விளையாடியிருக்கவில்லை. உலகின் பல்வேறு நாடுகளிலுள்ள கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

ஐபிஎல் ஏலம் நடைபெற்றபோது, நாங்கள் மலேசியாவில் இருந்தோம். நாங்கள் முதல் தர கிரிக்கெட்டர்கள் வரிசையில் ரூ.20 லட்சத்துக்கான ஏலத்தில் இடம்பெற்றோம். எங்களுக்கு 20 லட்சம் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தோம். மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக அது இருந்தது. ஏனெனில், கோலாகலமான தொடக்க விழா, மிகப் பெரிய கிரிக்கெட் வீரர்களுடன் சந்திப்பு என மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தோம்.

இதையும் படிக்க: நாங்கள் பயப்படப் போவதில்லை: சிஎஸ்கே பயிற்சியாளர்

ஐபிஎல் பயணம் மிகவும் நீண்ட பயணமாக இருந்துள்ளது. நாங்கள் இளம் வீரர்களாக ஐபிஎல் தொடரில் இணைந்தோம். சிறந்த கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து விளையாடினோம். இளம் வீரர்களாக அறிமுகமான நாங்கள் அனுபவம் வாய்ந்த வீரர்களாக வளர்ந்தோம்.

நேர்மையாக கூறவேண்டுமென்றால், ஐபிஎல் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இந்த அளவுக்கு ஐபிஎல் வளர்ச்சியடையும் என ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால், ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் உற்சாகம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள், நடத்தப்படும் விதம், அணிகளுக்கு இடையேயான கடும் போட்டி இந்த தொடரை மிகவும் விரும்பத்தக்கதாக மாற்றியுள்ளது என்றார்.

இதையும் படிக்க: 23 வயது நடிகையின் புகைப்பட சர்ச்சைக்கு விராட் கோலி விளக்கம்!

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 443 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசிய அணிக்குத் திரும்பும் வீரர்! பிளே-ஆஃப் சுற்றில் ஆர்சிபிக்கு பின்னடைவாக அமையுமா?

தேசிய அணிக்குத் திரும்பும் வீரரால் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்கு பின்னடைவு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதுவரை நடைபெற்ற 17 சீசன்களிலும் கோப்பை தாகத்தை தணிக்க முடியாத ஆர்சிபி அணி, நடப்பு ஐபிஎல் தொடரில... மேலும் பார்க்க

ஐபிஎல் நெறிமுறைகளை மீறிய ஹார்திக் பாண்டியா, நெஹ்ராவுக்கு அபராதம்!

ஐபிஎல் நெறிமுறைகளை மீறிய ஹார்திக் பாண்டியா, குஜராத் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றிரவு அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் - ... மேலும் பார்க்க

வில் ஜாக்ஸ் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 156 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும... மேலும் பார்க்க

ரிஷப் பந்த் மீண்டு வர தோனியிடம் பேச வேண்டும்: சேவாக்

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் இந்த சீசனில் மோசமாக விளையாடி வருகிறார். இதிலிருந்து வெளியேற எம்.எஸ்.தோனியிடம் ஆலோசனைப் பெற வேண்டுமென முன்னாள் வீரர் சேவாக் அறிவுரை வழங்கியுள்ளார். க... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்; முதலிடத்துக்கு முன்னேறுமா?

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெறும் இன்றையப் போட்டியில் மும்பை இந்தியன்... மேலும் பார்க்க

அதிரடியாக விளையாடுவதை ஆதரிப்பதாக நான் ஒருபோதும் கூறவில்லை: டேனியல் வெட்டோரி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடுவதை ஆதரிப்பதாக தான் ஒருபோதும் கூறவில்லை என அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டொரி தெரிவித்துள்ளார்.கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி... மேலும் பார்க்க