செய்திகள் :

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு; இறுதிப்போட்டி எங்கே?

post image

ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் நடத்தப்படும் இடங்களை ஐபிஎல் நிர்வாகம் இன்று (மே 20) அறிவித்துள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றம் காரணமாக ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மே 17 ஆம் தேதி முதல் மீண்டும் போட்டிகள் தொடங்கின. மீதமுள்ள போட்டிகள் நடைபெறும் புதிய அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. இருப்பினும், அதில் பிளே ஆஃப் போட்டிகள் நடைபெறும் இடங்கள் குறிப்பிடப்படவில்லை.

இதையும் படிக்க: ஓய்வு முடிவை திரும்பப் பெற்று ரோஹித், விராட் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும்: முன்னாள் வீரர்

அகமதாபாதில் இறுதிப்போட்டி

ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்று போட்டிகள் நடைபெறும் இடங்கள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகம் இன்று (மே 20) வெளியிட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டிகள் முல்லான்பூர் மற்றும் அகமதாபாதில் நடத்தப்படவுள்ளன.

மே 29 மற்றும் மே 30 ஆம் தேதிகளில் குவாலிஃபையர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டி முல்லான்பூரில் நடத்தப்படவுள்ளது. ஜூன் 1 மற்றும் ஜூன் 3 ஆம் தேதிகளில் குவாலிஃபையர் 2 மற்றும் இறுதிப்போட்டி அகமதாபாதில் நடத்தப்படவுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே சின்னசுவாமி திடலில் நடைபெறவிருந்த கடந்த போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில், வருகிற மே 23 ஆம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே பெங்களூருவில் நடைபெறவுள்ள போட்டி பருவமழை காரணமாக லக்னௌ திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இதற்கு முன்பாக கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அகமதாபாதில் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டும் இறுதிப்போட்டி அகமதாபாதில் நடைபெறவுள்ளது.

இதையும் படிக்க: நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடாத ரிஷப் பந்த்; மிட்செல் மார்ஷ் கூறியதென்ன?

முன்னதாக பிளே ஆஃப் போட்டிகள் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தாவில் நடத்தப்படுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையை வென்றது ராஜஸ்தான்

ஐபிஎல் போட்டியின் 62-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. முதலில் சென்னை 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள... மேலும் பார்க்க

ஆயுஷ், ப்ரீவிஸ் அதிரடி: ராஜஸ்தானுக்கு 188 ரன்கள் இலக்கு!

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 187 ரன்களை எடுத்துள்ளது. ஐபிஎல் 62-ஆவது போட்டியில் சிஎஸ்கே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தில்லியில் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற... மேலும் பார்க்க

நான் எப்போது அழுதேன்? 14 வயது வீரர் சூர்யவன்ஷி விளக்கம்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி முதல் போட்டியில் அழுதது குறித்து பேசியுள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணி மோசமாக விளையாடினாலும் அந்த அணியின் இளம் வீரர் 14 வயதில் பேட்டிங் செய்து உல... மேலும் பார்க்க

ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங்!

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ... மேலும் பார்க்க

ஒவ்வொருவரும் கே.எல்.ராகுல் மாதிரி விளையாட வேண்டும்: ஹேமங் பதானி

தில்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹேமங் பதானி கே.எல்.ராகுலைப் பாராட்டி பேசியுள்ளார். ஐபிஎல் 60-ஆவது போட்டியில் தில்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் தில்லி 20... மேலும் பார்க்க

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடாத ரிஷப் பந்த்; மிட்செல் மார்ஷ் கூறியதென்ன?

நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பந்த் சரியாக விளையாடாதது குறித்து மிட்செல் மார்ஷ் பேசியுள்ளார்.லக்னௌ அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பந்த்துக்கு நடப்பு ஐபிஎல் சீசன் சரியாக அமையவில்லை. மெகா ஏலத்தில... மேலும் பார்க்க