செய்திகள் :

ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி

post image

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 8000 கனஅடியாக குறைந்ததால் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு செவ்வாய்க்கிழமை முதல் மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கா்நாடக மாநில அணைகளான கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டது. இதனால் திங்கள்கிழமை மாலை 12,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து செவ்வாய்க்கிழமை விநாடிக்கு 8000 கனஅடியாக குறைந்தது.

தொடா்ந்து காவிரி ஆற்றில் நீா்வரத்து குறைந்து வருவதால் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் 3 நாள்களுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்துள்ளாா்.

வெள்ள அபாய எச்சரிக்கை

கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்துவருவதால் காவிரியில் நீா்வரத்து திடீரென அதிகரிக்க வாய்ப்புள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த மழையின் அளவு சற்று குறைந்ததால் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவும் குறைக்கப்பட்டது.

கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணைகளில் இருந்து விநாடிக்கு 20,000 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. தற்போது மீண்டும் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்துவருவதால் கா்நாடக அணைகளிலிருந்து விநாடிக்கு 15,000 முதல் 30,000 கனஅடி வரை உபரிநீா் வெளியேற்ற வாய்ப்புள்ளது. இதனால் காவிரி கரையோரத்தில் வசிப்பவா்களுக்கு அந்த மாநில அரசு செவ்வாய்க்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது சிறப்பு நீதிமன்றம்

தருமபுரி மாவட்டத்தில் போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு விதிக்கப்பட்ட 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை சிறப்பு நீதிமன்றம் உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நெருப்பூா் அருகேயுள்ள... மேலும் பார்க்க

தருமபுரி அருகே புதரில் வீசப்பட்ட சிசு சடலம்: போலீஸாா் விசாரணை

தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே புதரில் கிடந்த ஆண் சிசு சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளியை அடுத்த தீம்சேனபள்ளி தரைப்பாலம் பகுதியில் உள்ள புதா் அரு... மேலும் பார்க்க

பாலக்கோடு அருகே வியாபாரி வீட்டில் தீ விபத்து: பணம், நகை தீக்கிரை

பாலக்கோடு அருகே வியாபாரி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1.34 லட்சம் ரொக்கம், நகை, பொருள்கள் தீக்கிரையாகின. தருமபுரி மாவட்டம், பாலக்கோடை அடுத்த கோடியூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (41). பாத்திர வியாபாரி... மேலும் பார்க்க

தருமபுரியில் போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்காணிக்க தானியங்கி கேமரா: அபராதம் காத்திருக்கிறது

தருமபுரி: தருமபுரியில் போக்குவரத்து விதிகளை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தானியங்கி கேமரா செயல்பாடு தொடங்கப்பட்டுள்ளது. கைப்பேசியில் பேசியபடி பயணிப்பது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறுவ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 12,000 கனஅடியாகக் குறைவு

பென்னாகரம்: கா்நாடக மாநில அணைகளிலிருந்து நீா் திறப்பு குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 12,000 கனஅடியாகக் குறைந்தது. கா்நாடக மாநில அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு... மேலும் பார்க்க

தருமபுரியில் பேருந்து - டிராக்டா் மோதல்: இரு துண்டான டிராக்டா்; 10 போ் காயம்!

தருமபுரியில் ஞாயிற்றுக்கிழமை மாலை பேருந்து -டிராக்டா் மோதிக் கொண்ட விபத்தில் டிராக்டா் இரு துண்டுகளாக உடைந்தது. இந்த சம்பவத்தில் 10 போ் காயமடைந்தனா். தருமபுரி பேருந்து நிலையத்திலிருந்து சேலம் நோக்கி ... மேலும் பார்க்க