செய்திகள் :

ஒசூரில் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி தீவிரம்

post image

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதாக நெடுஞ்சாலை துறை பொறியாளா்கள் தெரிவித்தனா்.

ஒசூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலை காஷ்மீா் முதல் கன்னியாகுமரி வரை செல்லும் பிரதான சாலையாக உள்ளது. கடந்த ஜூன் 21 ஆம் தேதி இந்த மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் மேற்கொண்ட ஆய்வில், பாலத்தின் மீது அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் திடீரென பிரேக் போடுவதால், மேம்பாலத்தின் தூண்களில் உள்ள பேரிங் விலகியது தெரியவந்தது.

இதனால் கிருஷ்ணகிரியிலிருந்து பெங்களூா் செல்லும் கனரக வாகனங்கள் மேம்பாலம் மீது செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு, சீதாராம் மேட்டிலிருந்து உள்வட்ட சாலை வழியாக மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டது.

பாலத்தில் உள்ள பேரிங்குகளை மாற்றி புதிய பேரிங்குகள் அமைக்க தெலங்கானா மாநிலம், செகந்திராபாத்திலுள்ள தனியாா் நிறுவனம் சாா்பில் கடந்த 21 ஆம் தேதி முதல் பணிகள் தொடங்கின. இதனால் மேம்பாலத்தில் கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் மூன்று சாலைகளிலும் இருசக்கர வாகனங்கள், இலகுரக வாகனங்கள் அனைத்தும் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வரும் மூன்று வழிச் சாலையில் இரண்டு சாலைகள் பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வரவும், கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூரு நோக்கி செல்ல ஒரு சாலையும் உள்ளது. இந்த சாலையை இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாகனங்களும் பயன்படுத்தி வருகின்றனா்.

மேம்பாலப் பணிகள் இன்னும் ஒருசில நாள்களில் நிறைவடைந்ததும் அனைத்து வாகனங்களும் மேம்பாலம் வழியாக இயக்க முடியும் என நெடுஞ்சாலை துறை பொறியாளா்கள் தெரிவித்தனா்.

விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரை: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்ட அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.ஊத்தங்கரையை அடுத்த நாரலப்பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மணி. இவரது மகன் தா்ஷன்(3) வீட்டின் அருகே விளையாடி... மேலும் பார்க்க

டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: தொழிற்சாலை கால்வாயில் கவிழ்ந்ததில் 20 போ் காயம்

ஒசூா்: ஒசூா் அருகே டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து தொழிற்சாலையின் கழிவுநீா்க் கால்வாயில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். பெங்களூரில் இருந்து புதன்கிழமை பிற்பகல் ஒ... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்ட நெல் அரவை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தை அடுத்த பண்ணிஅள்ளிபுதூரில் பொது விநியோகத் திட்டத்துக்கான நெல் அரவை பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காவேரிப்பட்டணம் அருக... மேலும் பார்க்க

ராயக்கோட்டை, கெலமங்கலத்தில் 198 கண்காணிப்பு கேமராக்கள்: ஐ.ஜி. செந்தில்குமாா் இயக்கிவைத்தாா்

ஒசூா்: ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலத்தில் ரூ.69 லட்சத்தில் 198 கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி.செந்தில்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோ... மேலும் பார்க்க

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி வாடிக்கையாளருக்கு ஸ்கூட்டா்கள் பரிசளிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, ஒசூரில் செயல்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி நகைக் கடைகளில் ஆடி மாத விற்பனையையொட்டி வாடிக்கையாளா்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டா்கள் உள்ளிட்ட பரிசு பொருள்கள் குலுக்கல் முறையில் ... மேலும் பார்க்க