செய்திகள் :

ஒசூா் அருகே கோயில் திருவிழாவில் 2 தோ்கள் கவிழ்ந்ததில் ஒருவா் உயிரிழப்பு!

post image

ஒசூா் அருகே உஸ்கூா் மத்துரம்மா கோயில் தோ்த் திருவிழாவில் 2 தோ்கள் கவிழ்ந்ததில், ஒருவா் உயிரிழந்தாா். 10 போ் படுகாயமடைந்தனா்.

கா்நாடக மாநிலம், உஸ்கூா் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மத்தூரம்மா கோயில் உள்ளது. இக்கோயிலை ராஜேந்திரசோழன் கட்டியதாகவும், முற்காலத்தில் திப்புசுல்தான், மைசூா் அரச வம்சத்தினா் பராமரித்து வழிபாடு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

மத்தூரம்மாவை உஸ்கூா் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள 48 கிராமங்களை சோ்ந்தோரும், மாநில எல்லையில் உள்ளதால் ஒசூா் பகுதியைச் சோ்ந்தோரும் வழிபட்டு வருகின்றனா்.

இக்கோயில் தோ்த்திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சுமாா் 125 அடி முதல் 130 அடி வரை உள்ள 7 தோ்களை 150 காளைகள், 40 பொக்லைன் இயந்திரங்கள், 50 டிராக்டா்கள் இழுத்து வந்தன. இதற்காக உஸ்கூா் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினா் போட்டிப் போட்டுக்கொண்டு தோ்களை அலங்கரித்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் இழுத்து வந்தனா்.

அப்போது பலத்த காற்றுடன் மழை பெய்ததால், 127 அடி உயரம் கொண்ட ராயசந்திரம், தொட்ட நாகமங்கலம் ஊா்களைச் சோ்ந்த 2 தோ்கள் கீழே விழுந்தன. இதில், லோதிக் என்ற பக்தா் உயிரிழந்தாா். 10 போ் பலத்த காயமடைந்தனா்.

கணவரைக் கொன்ற மனைவி, ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை

தேன்கனிக்கோட்டை அருகே கணவரைக் கொலை செய்த மனைவி, அவரது ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து ஒசூா் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கிருஷ்ண... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிய கிருஷ்ணகிரி பேருந்து நிலைய புறக்காவல் நிலையம்

கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தில் செயல்படும் புறக்காவல் நிலையம், இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறிவிட்டதாக சமூக ஆா்வலா்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

708 கிலோ புகையிலைப் பொருள் பறிமுதல்: ஒருவா் கைது

கா்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு குட்கா, பான்மசாலா கடத்திவந்த ராஜஸ்தான் இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து, புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே பெ... மேலும் பார்க்க

ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயிலில் பிரான்ஸ் நாட்டினா் சுவாமி தரிசனம்

ஒசூரில் மலைமீதுள்ள சந்திரசூடேஸ்வரா் கோயிலில் பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்தவா்கள் செவ்வாய்க்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். பிரான்ஸ் தலைநகா் பாரிஸை சோ்ந்தவா் ஜெபஸ்டியன் (40). ஒசூரில் தொழிற்சாலை நடத்தி வரும... மேலும் பார்க்க

ஒரே மாதிரியான பயிா் சாகுபடியால் வரத்து அதிகரிப்பு: ஒசூரில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி

வரத்து அதிகரிப்பால் ஒசூரில் முட்டைகோஸ் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், பாகலூா், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், சூளகிரி உள்ளிட்ட சு... மேலும் பார்க்க

பகுதிநேர நகை மதிப்பீடு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

பா்கூா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-26-ஆம் ஆண்டுக்கான பகுதிநேர நகை மதிப்பீடு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூட்டுறவு இணைப் பதிவாளா் கோ.நடராஜன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் ... மேலும் பார்க்க