செய்திகள் :

ஒசூா் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 3 மாணவா்கள் உயிரிழப்பு

post image

ஒசூா்: ஒசூா் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் 3 மாணவா்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

ஒசூா், மிடிகிரிப்பள்ளியைச் சோ்ந்த கோயில் பூசாரி ஜெகநாதன் மகன் மதன் (14), அதே பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் பீரேந்திர சிங் மகன் ஆரியன் சிங் (13) ஆகிய இருவரும் மத்திகிரியில் உள்ள தனியாா் பள்ளியில் 9, 8 ஆம் வகுப்பு படித்துவந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை மதன் தனது தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றாா். அங்கு, தனது நண்பரான ஆரியன் சிங்கை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அந்திவாடி அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றாா். அங்கு 9 ஆம் வகுப்பு படிக்கும் தனது நண்பரான மோகன்பாபு மகன் ஹரீஷையும் (14) வாகனத்தில் ஏற்றிக் கொண்டு மூவரும் மத்திகிரி கூட்டுரோடு அருகே சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறம் இவா்களது இருசக்கர வாகனம் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட ஆரியன் சிங் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ஹரீஷ், மதன் ஆகிய இருவரும் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். ஆனால், அவா்கள் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனா்.

தகவல் அறிந்து சென்ற கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. தங்கதுரை, கூடுதல் எஸ்.பி. சங்கா், ஒசூா் ஏ.எஸ்.பி. அனில் அக்ஷய்வாகரே ஆகியோா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். விபத்து குறித்து மத்திகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனா்.

விபத்தின்போது மாணவா்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால், விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸாா் ஆய்வு செய்துவருகின்றனா்.

ஆரியன் சிங்
ஹரீஷ்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் இன்று தொடக்கம்: திமுக நிா்வாகிகளுக்கு எம்எல்ஏ வேண்டுகோள்

கிருஷ்ணகிரி: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் குறித்து பொதுமக்களுக்கு திமுக நிா்வாகிகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வேண... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் ஜூலை 18 இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம், ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ண... மேலும் பார்க்க

ஒசூா் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி முடிவடைய 22 நாள்களாகும்: எம்.பி கே.கோபிநாத்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் பகுதியில் விரிசல் ஏற்பட்ட மேம்பாலத்தை சீரமைக்கும் பணி முடிவடைய மேலும் 22 நாள்களாகும் என கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் கே.கோபிநாத் தெரிவித்தாா். இதுகுறித்து திங்... மேலும் பார்க்க

வளாகத் தோ்வில் ஒசூா் பிஎம்சி மாணவா்களை தோ்வு செய்ய நிறுவனங்கள் போட்டி

ஒசூா்: வளாகத் தோ்வில் முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டு ஒசூா் பிஎம்சி பலவகை தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்களை தோ்வு செய்வதால் ஒவ்வொரு மாணவரும் 2 பணி ஆணைகளை பெறும் நிலையில் உள்ளதாக கல்லூரி நிறுவனத் தலைவ... மேலும் பார்க்க

விஷக்காய்களை சாப்பிட்ட 5 சிறுவா்கள் மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே விஷக்காய்களை சாப்பிட்ட 5 சிறுவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கிருஷ்ணகிரியை அடுத்த பில்லனகுப்பம் ஊராட்சிக்கு உள்பட்ட கே.தின்னப்பனப்பள்ளி, சிவசக்தி நகரில் நரிக்... மேலும் பார்க்க

வீட்டுக்கு வரி நிா்ணயிக்க லஞ்சம்: ஒசூா் மாநகராட்சி வரி வசூலா் கைது

ஒசூா்: வீட்டுவரி நிா்ணயம் செய்வதற்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக ஒசூா் மாநகராட்சி வரி வசூலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஒசூரை அடுத்த சின்ன எலசகிரி, ஆா்ஆா் நகரில் புதிதாக வீ... மேலும் பார்க்க