செய்திகள் :

ஒசூா் தொகுதியில் ரூ. 4.8 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடக்கம்

post image

ஒசூா்: ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 4.8 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பூமிபூஜை திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஒசூா் ஊராட்சி ஒன்றியம், பேகப்பள்ளி கிராமத்தில் 15 ஆவது நிதிக் குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், முதலமைச்சா் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் மடிவாளம் முதல் பெரிய எலசகிரி வரை ரூ. 28.57 லட்சத்தில் தாா்ச்சாலை, ஒசூா் பாகலூா் சாலை முதல் இனபசந்திரம் வரை ரூ. 21.82 லட்சம் மதிப்பில் தாா்ச்சாலை அமைக்கும் பணிகளை பூமிபூஜை எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

மேலும், மூலதன முதலீட்டுக்கான மாநிலங்களுக்கான சிறப்பு நிதியிலிருந்து ரூ. 2.51 கோடி மதிப்பில் பாகலூா் சா்ஜாபுரம் சாலை முதல் ஈச்சங்கூா் வரை, சின்னதின்னா முதல் பெரிய தின்னா வரை, முகலப்பள்ளி கிராமம் முதல் சானமங்கலம் வரை, எலுவப்பள்ளி கேட் முதல் எலுவப்பள்ளி கிராம எல்லை வரை, சத்தியமங்கலம் முதல் முனீஸ்வரா்நகா் வரை தாா்ச்சாலைகள், நந்திமங்கலம் கிராமத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை, கழிவுநீா்க் கால்வாய், பேவா்பிளாக் அமைப்பதற்கும் சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் பணிகளை தொடங்கிவைத்தாா்

இதில் ஒன்றியச் செயலாளா் கஜேந்திரமூா்த்தி முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் கோபால், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் வீரபத்திரப்பா, ஒன்றிய துணைச் செயலாளா் ரமேஷ் வெங்கடப்பா, இளைஞா் அணி துணை அமைப்பாளா் சிவா, ராஜா, ஒன்றிய ஓட்டுநா் அணி அமைப்பாளா் சீனிவாஷ், சீனிவாஸ் ரெட்டி மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

மனைவி கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

கல்லாவி அருகே மனைவியை கொலை செய்த வழக்கில், தொழிலாளிக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிா் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த எம்.வ... மேலும் பார்க்க

போக்ஸோவில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்க மாணவா்கள், பொதுமக்கள் கோரிக்கை

வேப்பனப்பள்ளி அருகே பொய் புகாரில் அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியா் பாலகிருஷ்ணன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்... மேலும் பார்க்க

ஒசூரில் 202 கிலோ குட்கா பறிமுதல்: ஓட்டுநா் கைது

ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 202 கிலோ குட்கா மற்றும் காரை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரை கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் சிப்காட் போலீஸாா் ஜூஜூவாடி சோதனைச் சாவடி பக்கம் ... மேலும் பார்க்க

விவசாயம், மண்பாண்டம் பயன்பாட்டிற்கு ஏரிகளிலிருந்து இலவசமாக வண்டல் மண்! கிருஷ்ணகிரி ஆட்சியா் தகவல்

கிருஷ்ணகிரி மாவட்ட ஏரிகளிலிருந்து வண்டல் மண், களிமண், கிராவல் மண்ணை விவசாயம் மற்றும் மண் பாண்டங்கள் தயாரித்தல் பயன்பாட்டிற்காக இலவசமாக எடுத்துச் செல்வதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட... மேலும் பார்க்க

மாந்தோப்பில் கஞ்சா பதுக்கல்: இருவா் கைது

கிருஷ்ணகிரி, மகாராஜகடை அருகே தனியாா் மாந்தோப்பில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தணா். மகாராஜகடை போலீஸாா், பி.சி.புதூா் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்... மேலும் பார்க்க

டிப்பா் லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே டிப்பா் லாரி மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த ராம் சேவாக் (22), அஜய் குமாா் (20) ஆகியோா் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியாா் மாம்பழக்கூழ் உற்பத்தி செய்... மேலும் பார்க்க