செய்திகள் :

ஒடிசா: பள்ளிகளைக் காவிமயமாக்கும் பாஜக அரசு!

post image

ஒடிசாவில் அரசுப் பள்ளிகள் அனைத்திற்கும் காவிநிற வர்ணம் பூச பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் காவி நிறம் பூசுவது தொடர்பாக, அதற்கான மாதிரிப் படத்துடன் ஒடிசா மாநில மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கையை பாஜக அரசு அனுப்பியுள்ளது. பாஜக அரசின் இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிஜு ஜனதா தளத்தின் மூத்தத் தலைவர் பிரசன்னா ஆச்சார்யா கூறியதாவது, பள்ளிகளுக்கு காவி நிறம் பூசுவதன் நோக்கம் என்ன? கட்டடங்களின் நிறங்களை மாற்றுவதன் மூலம் கல்வி முறையை மாற்ற முடியுமா அல்லது மாணவர்களிடையே அதிக ஆற்றலைக் கொண்டுவர முடியுமா? மாணவர்களின் மனதில் அரசியலைப் புகுத்தும் முயற்சியில்தான் பாஜக ஈடுபடுகிறது’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சி: இபிஎஸ்

இதனிடையே, பள்ளிகளின் மீதான நிறமாற்றம் குறித்து ஒடிசா பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறியதாவது, ``அரசின் இந்த முடிவு, ஒரு நல்ல சூழலை உருவாக்கும். பள்ளிகளின் நிறமாற்றத்தால், பள்ளிகள் மேலும் கவர்ச்சிகரமானதாக இருக்கும்" என்று பதிலளித்தார்.

கடந்தாண்டு, ஒடிசாவில் பாஜக ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்னர்வரையில், பிஜு ஜனதா தளக் கட்சிக் கொடியில் இருக்கும் பச்சை நிறத்தில்தான் பள்ளிகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

பிகாரில் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்க அனுமதி: ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) ஆட்சிக்கு வந்தால் முழு மதுவிலக்கு தளா்த்தப்பட்டு கள் இறக்குவதற்கு மட்டும் அனுமதிக்கப்படும் என்று அக்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளாா். கடந்த 2016-ஆம் ... மேலும் பார்க்க

உத்தரகண்டில் குளிா்கால சுற்றுலா: பிரதமா் மோடி அழைப்பு

உத்தரகண்ட் மாநிலத்துக்கு குளிா்காலத்தில் சுற்றுலா வந்தால், அதன் உண்மையான அழகைக் காண முடியும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். உத்தரகண்ட் மாநிலத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்த பிரதமா் மோடி, உத... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய விருது

கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமா் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பாா்படாஸ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் வசிப்பவா்கள் மராத்தி கற்க வேண்டும்: முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ்

மகாராஷ்டிரத்தின் மொழி மராத்தி. எனவே, இங்கு வசிப்பவா்கள் மராத்தி கற்றுக் கொள்ளவும், பேசவும் வேண்டும்’ என்று அந்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தாா். மத்திய அரசு அமல்படுத்த முயலும் மும்மொழி... மேலும் பார்க்க

காஷ்மீா் பிரச்னை - 'திருடிய' பகுதியை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைத்த பிறகே தீா்வு: எஸ்.ஜெய்சங்கா்

தங்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள ‘திருடப்பட்ட’ காஷ்மீா் பகுதிகளை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைத்த பிறகே இப்பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கூறினாா். பிர... மேலும் பார்க்க

ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடா்புடைய காலிஸ்தான் பயங்கரவாதி கைது: உத்தர பிரதேசத்தில் கும்பமேளாவை சீா்குலைக்க சதி!

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவை சீா்குலைக்கு சதித் திட்டம் தீட்டிய காலிஸ்தான் பயங்கரவாதியை கௌசாம்பி மாவட்டத்தில் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா். பாகிஸ்தான் உளவ... மேலும் பார்க்க