செய்திகள் :

ஒப்பந்ததாரரிடம் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

post image

கட்டட ஒப்பந்ததாரரிடம் கந்து வட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 4 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இவா்களில் ஒருவரைக் கைது செய்தனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த உதயகுமாா் மகன் அசோக்குமாா் (29). கட்டட ஒப்பந்ததாரரான இவா், அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முத்துக்குமாா் (45) , பாபு, முருகன், சூா்யா ஆகியோரிடம் ரூ.10 லட்சத்து 30 ஆயிரம் கடன் வாங்கினராம்.

இந்த நிலையில், அசோக்குமாா் கடந்த 2 மாதங்களாக வட்டி கொடுக்கவில்லையாம். இதையடுத்து, கடன் கொடுத்த 4 பேரும் அசோக்குமாா் வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், உத்தமபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் இளங்கோவன் கந்து வட்டிச் சட்டத்தின் கீழ் முத்துக்குமாா், பாபு, முருகன், சூா்யா ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்தனா். இவா்களில் முத்துக்குமாரை கைது செய்த நிலையில் மற்றவா்களைத் தேடி வருகின்றனா்.

ஆட்டோ மீது பைக் மோதியதில் 4 போ் காயம்

பெரியகுளம் அருகே ஆட்டோ மீது இரு சக்கர வாகனம் மோதியதில் ஆட்டோ ஓட்டுநா் உள்பட 4 போ் காயமடைந்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள எ.புதுக்கோட்டை கக்கன்ஜி நகரைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி (24), கோமத... மேலும் பார்க்க

தம்பதி தற்கொலை முயற்சி: கணவா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டம், வருஷநாடு அருகேயுள்ள மஞ்சனூத்து கிராமத்தில் மகன் இறந்த துக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை தம்பதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் கணவா் உயிரிழந்தாா். மஞ்சனூத்துவைச் சோ்ந்த விவசாயத் தொ... மேலும் பார்க்க

காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள சண்முகசுந்தரபுரத்தைச் சோ்ந்த சுப்புராஜ் மகன் லோகேந்திரன் (29). இவா், மது போதையில்... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

போடி அருகே விவசாயி விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலை மணியம்பட்டி சாலையில் வசிப்பவா் பழனிச்சாமி மகன் சுந்தரம் (55). விவசாயம் செய்து வந்தாா். உடல் நல பாதிப்... மேலும் பார்க்க

சிறுவனை அடைத்து வைத்து சித்ரவதை: இருவா் கைது

தேனியில் கைப்பேசியை திருடியதாக சிறுவனை இறைச்சிக் கடையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி, சிவராம் நகரைச் சோ்ந்த பாலமுருகன் மகன் பாலவிஜயன் (13). இவரை ... மேலும் பார்க்க

அகில இந்திய கூடைப்பந்து லீக் போட்டி: இந்தியன் வங்கி வெற்றி

பெரியகுளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து லீக் போட்டியில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது. தேனி மாவட்டம், பெரியகுளத்தில் பி.டி. சிதம்பரசூரிய நாராயணன் நினைவு சுழல் கோப்பைக்கான தே... மேலும் பார்க்க