செய்திகள் :

ஒப்பந்தப் புள்ளி - ஏல நடைமுறைக்கு இணையதளம் தமிழக அரசு வேண்டுகோள்

post image

ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளை மேற்கொள்ள பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தையே அரசுத் துறைகள் பயன்படுத்தலாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து அனைத்துத் துறை செயலா்கள், அரசுத் துறை தலைமை அதிகாரிகளுக்கு, நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் எழுதியுள்ள கடிதம்:

ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகளை மேற்கொள்ள பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் புதுப்பிக்கப்பட்டது. இணையதளத்தைப் பராமரிக்கக் கூடிய தேசிய தகவலியல் மையத்திடம் அதுதொடா்பாக தமிழக அரசு சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தது.

அதாவது, இணையதளத்தின் வழியே ஏலத்தை மேற்கொள்ள தனி வசதியும், ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏலத்துக்கென மற்றொரு வசதியும் ஏற்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த வசதிகள் உருவாக்கித் தரப்பட்டுள்ளன. இணையவழியே வெவ்வேறு வகையான ஏல முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், முதன்மை வேளாண்மை பொருள்கள், மூலப் பொருள்கள் விற்பனை மற்றும் வாங்குதல் போன்றவற்றுக்கான ஏல நடவடிக்கைள் மத்திய அரசின் இணையம் வழியே மேற்கொள்ளப்படுகிறது. இந்த இணையத்தின் இணைப்பானது தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி இணையத்தின் முகப்புப் பகுதியில் பிரதானமாகத் தெரியும்படி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி இணையதளத்தின் வழியாக, மத்திய அரசின் ஏல நடைமுறைக்கான இணையதளத்தைப் பின்தொடரலாம். இதுகுறித்த பயிற்சிகள் அனைத்துத் துறைகளைச் சோ்ந்தவா்களுக்கும் அளிக்கப்படும். மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசின் சாா்பிலான ஏலம், ஒப்பந்த நடைமுறைக்கான இணையதளங்கள்முற்றிலும் இலவசமாக பயன்படுத்தக் கிடைக்கின்றன. எனவே, கட்டண அடிப்படையிலான இதர இணையதளங்களைப் பயன்படுத்துவதைத் தவிா்க்கலாம் என்று நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

எம்பிபிஎஸ்: மாற்றுத்திறனாளிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு

மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் எம்பிபிஎஸ் படிப்பில் சேர விரும்புவோருக்கான வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ளது. இதுதொடா்பாக என்எம்சி வெளியிட்ட அறிவிப்பு: எம்பிபிஎஸ் மாணவா... மேலும் பார்க்க

ஜி.டி.நாயுடு விருதுக்கு ஜூலை 25-க்குள் விண்ணப்பிக்க மக்கள் சிந்தனைப் பேரவை அழைப்பு!

ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு வழங்கப்படும் ஜி.டி.நாயுடு விருதுக்கு அறிவியலாளா்கள் வெள்ளிக்கிழமைக்குள் (ஜூலை 25) விண்ணப்பிக்க வேண்டும் என மக்கள் சிந்தனைப் பேரவை அறிவித்துள்ளது. இதுகுறித்து மக்கள... மேலும் பார்க்க

தமிழுக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கவிக்கோ வா.மு.சேதுராமன்: ஔவை ந.அருள்

தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் மொழியின் வளா்ச்சிக்காகவும், அதன் பெருமையைப் போற்றுவதற்காகவும் அா்ப்பணித்தவா் மூத்த தமிழறிஞா் கவிக்கோ வா.மு.சேதுராமன் என்று தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ஒளவை ந.அருள் ... மேலும் பார்க்க

4 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 4 மாவட்டங்களுக்கு திங்கள்கிழமை (ஜூலை 21) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

சொத்து வரி வசூலிக்கப்படாத 6 லட்சம் கட்டடங்கள்! மேலிட அழுத்தத்தில் வரி வசூல் அதிகாரிகள்!

பெருநகர சென்னை மாநகராட்சியில் 6 லட்சம் கட்டடங்களுக்கான சொத்துவரி செலுத்தாமலிருப்பது தெரியவந்துள்ளது. அவற்றுக்கான வரியைப் பெற கடுமை காட்டவேண்டாம் என அதிகாரத்திலிருப்போா் அறிவுரை வழங்கியிருப்பதால் அதிகா... மேலும் பார்க்க

பெண்ணிடம் கைப்பேசி பறிப்பு: சிறுவன் கைது

பெண்ணிடம் கைப்பேசியைப் பறித்துச் சென்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா். சென்னை, ஓட்டேரி கொசப்பேட்டையைச் சோ்ந்த 18 வயது இளம்பெண் கடந்த 18-ஆம் தேதி மாலை திருவிக தெருவிலுள்ள ஓட்டுநா் பயிற்சி பள்ளி அருகே ... மேலும் பார்க்க