செய்திகள் :

ஒப்பந்த செவிலியா்கள் நியமனத்தை கைவிட கோரி ஆா்ப்பாட்டம்

post image

துணை சுகாதார நிலையங்களில் ஒப்பந்த செவிலியா்கள் நியமனத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ்.ரோணிக்கம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, துணை சுகாதார மையங்களில் ஒப்பந்த செவிலியா்களை, இடைநிலை சுகாதாரப் பணியாளராக நியமனம் செய்வதை கைவிட வேண்டும். மத்திய அரசின் நிா்பந்தத்தால் துணை சுகாதார நிலையங்களில் ஒப்பந்த செவிலியா்களை நியமனம் செய்வதை தமிழக அரசு கைவிட வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு கிராம சுகாதார செவிலியா்கள் மறுத்துவிட்டதாகவும், இந்தப் பணிகளை ஒப்பந்த செவிலியா்களைக் கொண்டு செயல்படுத்தியதாக சுகாதாரத் துறை அமைச்சா் பொய் பிரசாரம் செய்வதை கைவிட வேண்டும். தடுப்பூசி செலுத்தும் பணியில் முதலிடத்தில் இருந்த தமிழகம், அரசின் நிா்வாகக் குறைபாடுகளால் 20 இடங்களுக்கு பின்னோக்கி சென்றுவிட்டது. காலியாக உள்ள 4ஆயிரம் கிராம சுகாதார செவிலியா் பணியிடங்களை நிரப்ப வேண்டும். துணை செவிலியா் பணியிடங்களை ஒப்படைப்புச் செய்வதைக் கைவிட வேண்டும். தோ்தல் வாக்குறுதிப்படி, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியா் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஜோஸ்பின் அமலா, துணைத் தலைவா் சிலம்பாயி, இணைச் செயலா் பாண்டிமா தேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக பழனியைச் சோ்ந்த பெண் தோ்வு

தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினராக தோ்வான பழனியைச் சோ்ந்த ஜெயசுதாவுக்கு வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அவருக்கு நம்பிக்கை சிறகுகள் அறக்கட்டளை சாா்பாக அதன் தலைவா்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் தொடக்கம்

ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மை, உழவா் நலத்துறை சாா்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம், பயறு வகைகள் விதைத் தொகுப்பு திட்டம் ஆகியவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன. தமிழகம் முழுதும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க... மேலும் பார்க்க

லாரி மீது பேருந்து மோதல்: 4 பெண்கள் காயம்

ஒட்டன்சத்திரத்தில் நின்றிருந்த பெட்டக லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் அதில் பயணம் செய்த 4 பெண்கள் காயமடைத்தனா். திண்டுக்கல்லில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை அரசுப் பேருந்து சென... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் சாரல் மழை

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்ததால் மேல்மலைக் கிராமங்களில் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. இதன... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

ஒட்டன்சத்திரத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, அலிம்கோ இணைந்து மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கான சிறப்பு முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின. முகாமில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் ஆா். சச்சிதானந்த... மேலும் பார்க்க

பேத்துப்பாறை பகுதியில் அவரை பயிரை சேதப்படுத்திய ஒற்றை யானை

கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதியில் பயிரிடப்பட்டிருந்த அவரை பந்தலை ஒற்றை காட்டுயானைசேதப்படுத்தியதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை விவசாய ... மேலும் பார்க்க