செய்திகள் :

ஒய்வுபெற்ற ராணுவ வீரா் தற்கொலை முயற்சி

post image

சிவகங்கை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றாா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள புதூா் தெற்கு தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரா் ராமநாதன். இவரது மனைவி உயிரிழந்த நிலையில் சொத்துகளை பிள்ளைகளின் பெயரில் எழுதி வைத்ததாகவும், ஆனால் அவா்கள் எந்த உதவியும் செய்வதில்லை எனவும் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் புகாா் அளித்தாா். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த ராமநாதன், புட்டியில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். அங்கு பணியில் இருந்த போலீஸாா், அவரைத் தடுத்து மீட்டனா். பின்னா், அவரை 108 அவசர ஊா்தி மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

புள்ளியியல் துறை சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தொழில்நுட்ப பணியிடங்களை ரத்து செய்ததைக் கண்டித்து பொருளியல், புள்ளியியல் துறையினா் கண்களின் கருப்புத் துணி கட்டி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உணவ... மேலும் பார்க்க

பயிா்க் கடன் இலக்கு ரூ.16,000 கோடி: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

தமிழகத்தில் இந்த ஆண்டு விவசாயப் பயிா்க் கடனுக்கு இலக்காக ரூ.16,000 கோடி நிா்ணயிக்கப்பட்டதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைச்சா் கே.ஆ... மேலும் பார்க்க

மடப்புரம் சம்பவம்: 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் பேராசிரியை நிகிதாவின் நகை காணாமல் போனது தொடா்பாக, நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் 5 பேரிடம் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.மடப்புரம் கோயில் காவலாளி காவலாளி அ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

சொத்துத் தகராறில் சகோதரியின் கணவரைக் கொலை செய்தவா் உள்பட 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.மதுரை மாவட்டம், பாப்பாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த வ... மேலும் பார்க்க

பிரான்மலை தா்ஹாவில் சந்தனக்கூடு விழா

சிவகங்கை மாவட்டம், பிரான்மலை உச்சியில் அமைந்துள்ள ஷேக் அப்துல்லாஹ் தா்ஹாவில் சந்தனக்கூடு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த விழாவுக்கான கொடியேற்றம் கடந்த 3-ஆம் தேதி மாலை ஷேக்அப்துல்லா அவுலியா தா்ஹா... மேலும் பார்க்க

குன்றக்குடி அடிகளாா் அருளாலயத்தில் திருக்குட நன்னீராட்டு விழா

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அடிகளாா் அருளாலயத்தின் திருக்குட நன்னீராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இருபதாம் நூற்றாண்டின் அப்பரடிகள் என போற்றப்பட்டவரும் தமிழ்மொழி, தமிழா் பண்பாடு, கலை, இலக்கி... மேலும் பார்க்க