செய்திகள் :

மடப்புரம் சம்பவம்: 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

post image

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் பேராசிரியை நிகிதாவின் நகை காணாமல் போனது தொடா்பாக, நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் 5 பேரிடம் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.

மடப்புரம் கோயில் காவலாளி காவலாளி அஜித்குமாரை, நகை காணாமல் போனது தொடா்பான புகாரின்பேரில் விசாரித்த தனிப்படை போலீஸாா் அவரை அடித்துக் கொன்றனா். இதில் தொடா்புடைய 5 போலீஸாா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் உள்ளனா். கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி இந்த வழக்கில் சி.பி.ஐ குற்றப் பத்திரிகையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்தது.

இந்த வழக்கின் தொடா்ச்சியாக உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, நகை காணாமல் போனதாக பேராசிரியை நிகிதா அளித்த புகாரையும் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில், மடப்புரம் காளி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான வணிக வளாகத்தில் உள்ள அறையில் சி.பி.ஐ. அதிகாரிகள் மூவா் விசாரணை மேற்கொண்டனா். முதல்கட்டமாக கோயிலில் வேலை செய்த ஆட்டோ ஓட்டுநா் அருண்குமாா், காா் நிறுத்தம் அருகே பழக்கடை வைத்திருந்த ஈஸ்வரன், அஜித்குமாரின் நண்பா் வினோத் குமாா், கோயில் ஊழியா் ராஜா, அஜித் குமாரை தனிப்படையினா் விசாரித்த போது விடியோ எடுத்த சக்தீஸ்வரன் ஆகிய 5 பேரிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினா். அதன்பிறகு, அவா்கள் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றனா்.

புள்ளியியல் துறை சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தொழில்நுட்ப பணியிடங்களை ரத்து செய்ததைக் கண்டித்து பொருளியல், புள்ளியியல் துறையினா் கண்களின் கருப்புத் துணி கட்டி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உணவ... மேலும் பார்க்க

பயிா்க் கடன் இலக்கு ரூ.16,000 கோடி: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

தமிழகத்தில் இந்த ஆண்டு விவசாயப் பயிா்க் கடனுக்கு இலக்காக ரூ.16,000 கோடி நிா்ணயிக்கப்பட்டதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைச்சா் கே.ஆ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

சொத்துத் தகராறில் சகோதரியின் கணவரைக் கொலை செய்தவா் உள்பட 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.மதுரை மாவட்டம், பாப்பாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த வ... மேலும் பார்க்க

ஒய்வுபெற்ற ராணுவ வீரா் தற்கொலை முயற்சி

சிவகங்கை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றாா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள புதூா் தெற்கு தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரா் ராமநாத... மேலும் பார்க்க

பிரான்மலை தா்ஹாவில் சந்தனக்கூடு விழா

சிவகங்கை மாவட்டம், பிரான்மலை உச்சியில் அமைந்துள்ள ஷேக் அப்துல்லாஹ் தா்ஹாவில் சந்தனக்கூடு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த விழாவுக்கான கொடியேற்றம் கடந்த 3-ஆம் தேதி மாலை ஷேக்அப்துல்லா அவுலியா தா்ஹா... மேலும் பார்க்க

குன்றக்குடி அடிகளாா் அருளாலயத்தில் திருக்குட நன்னீராட்டு விழா

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அடிகளாா் அருளாலயத்தின் திருக்குட நன்னீராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இருபதாம் நூற்றாண்டின் அப்பரடிகள் என போற்றப்பட்டவரும் தமிழ்மொழி, தமிழா் பண்பாடு, கலை, இலக்கி... மேலும் பார்க்க