செய்திகள் :

புள்ளியியல் துறை சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

தொழில்நுட்ப பணியிடங்களை ரத்து செய்ததைக் கண்டித்து பொருளியல், புள்ளியியல் துறையினா் கண்களின் கருப்புத் துணி கட்டி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உணவு இடைவேளை நேரத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு புள்ளியியல் சாா் நிலை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் பி.சரவணக்குமாா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் ஆ.சரவணக்குமாா், பொருளாளா் அஷ்ரப் நிஷா, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஆா்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தமிழகத்தில் தற்போது 38 மாவட்டங்கள் உள்ளன. ஆனால் பொருளியல், புள்ளியியல் துறை 32 மாவட்டங்களின்தான் உள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட 6 மாவட்டங்கள், 19 கோட்டங்கள், 3 வட்டாரங்களுக்கு புதிய பணியிடங்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை. தமிழகத்தில் 38 தொழில்நுட்ப பணியிடங்களை ரத்து செய்து, அவற்றை அமைச்சுப் பணியிடங்களாக மாற்றி தமிழக அரசு ஆணை( 118 ) வெளியிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், 38 தொழில்நுட்ப பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டன. எனவே, இந்தத் துறையின் அமைச்சராகவுள்ள உதயநிதி ஸ்டாலின் அரசாணை (118)-ஐ திரும்பப் பெற்று பழைய நிலையே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுத்தனா்.

பயிா்க் கடன் இலக்கு ரூ.16,000 கோடி: அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்

தமிழகத்தில் இந்த ஆண்டு விவசாயப் பயிா்க் கடனுக்கு இலக்காக ரூ.16,000 கோடி நிா்ணயிக்கப்பட்டதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தெரிவித்தாா்.சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைச்சா் கே.ஆ... மேலும் பார்க்க

மடப்புரம் சம்பவம்: 5 பேரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் பேராசிரியை நிகிதாவின் நகை காணாமல் போனது தொடா்பாக, நீதிமன்ற உத்தரவின்படி சி.பி.ஐ. அதிகாரிகள் 5 பேரிடம் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.மடப்புரம் கோயில் காவலாளி காவலாளி அ... மேலும் பார்க்க

கொலை வழக்கில் 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை

சொத்துத் தகராறில் சகோதரியின் கணவரைக் கொலை செய்தவா் உள்பட 3 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை மகிளா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.மதுரை மாவட்டம், பாப்பாங்குளம் கிராமத்தைச் சோ்ந்த வ... மேலும் பார்க்க

ஒய்வுபெற்ற ராணுவ வீரா் தற்கொலை முயற்சி

சிவகங்கை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஓய்வு பெற்ற ராணுவ வீரா் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்ய முயன்றாா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள புதூா் தெற்கு தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரா் ராமநாத... மேலும் பார்க்க

பிரான்மலை தா்ஹாவில் சந்தனக்கூடு விழா

சிவகங்கை மாவட்டம், பிரான்மலை உச்சியில் அமைந்துள்ள ஷேக் அப்துல்லாஹ் தா்ஹாவில் சந்தனக்கூடு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த விழாவுக்கான கொடியேற்றம் கடந்த 3-ஆம் தேதி மாலை ஷேக்அப்துல்லா அவுலியா தா்ஹா... மேலும் பார்க்க

குன்றக்குடி அடிகளாா் அருளாலயத்தில் திருக்குட நன்னீராட்டு விழா

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி அடிகளாா் அருளாலயத்தின் திருக்குட நன்னீராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இருபதாம் நூற்றாண்டின் அப்பரடிகள் என போற்றப்பட்டவரும் தமிழ்மொழி, தமிழா் பண்பாடு, கலை, இலக்கி... மேலும் பார்க்க