செய்திகள் :

ஒரே நேரத்தில் லெபனான், சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல்!

post image

லெபனான், சிரியா ஆகிய நாடுகளின் மீது இஸ்ரேல் ராணுவம் இன்று தாக்குதல் நடத்தியுள்ளது. நாட்டின் வடக்கு எல்லையை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இந்தத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தியுள்ளது.

சிரியாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் ஹிஸ்புல்லாக்களுக்கு ஆதரவு அளித்துவரும் லெபனான் மீதும் இஸ்ரேல் ராணுவம் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளது.

சிரியாவில் கடந்த டிசம்பர் மாதம் சர்வாதிகாரியான பாஷர் - அல்- ஆசாத்தின் ஆட்சியை இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் கவிழ்த்ததைத் தொடர்ந்து அங்கு புதிய தலைமை, ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது.

சிரியாவில் பாலைவனத்தில் வசிக்கும் பெடோயின் என்ற பழங்குடி மக்களுக்கும் ட்ரூஸ் மதத்தைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த மோதலை நிறுத்துவதற்காக அப்பகுதிகளுக்கு படைகளை சிரியா அரசு அனுப்பி வைத்தது. இதில் உயிரிழப்புகள் மட்டுமே அதிகரித்ததே தவிர, மோதல் நிற்கவில்லை.

இதனிடையே, இஸ்ரேல் இன்று சிரியாவின் அரசு கட்டடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. சிரியாவின் தெற்கில் உள்ள சுவேதா மாகாணத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதேபோன்று, லெபனானின் பேகா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் படையினர் குண்டுகளை வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். ஹிஸ்புல்லா ஆயுதப் படையினருக்கு ஆதரவுக்கரம் அங்கு அதிகம் உள்ளதால், அப்பகுதியை இஸ்ரேல் குறிவைத்துள்ளது.

இதனிடையே இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் காட்ஸ் கூறுகையில், ஹிஸ்புல்லாக்களுக்கும், லெபனான் அரசுக்கும் இஸ்ரேல் விடுத்துள்ள தெளிவான செய்திதான் இந்தத் தாக்குதல். தங்கள் ராணுவத்தின் திறனை முழுமையாக மீட்டெடுக்கும் வகையில் எந்தவொரு தீவிர தாக்குதலையும் நடத்த இஸ்ரேல் தயாராக உள்ளது எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | இஸ்ரேலை தாக்க முயன்ற ஹவுதிகளின் ட்ரோன் தகர்ப்பு!

Israeli air raids struck eastern Lebanon's Bekaa Valley and Syria's southern Suwayda region

கடந்த ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை: ஐ.நா. தகவல்

உலகம் முழுவதும் கடந்த 2024-ஆம் ஆண்டும் 1.4 கோடி குழந்தைகளுக்கும் அதிகமானோருக்கு ஒரு தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை என்று ஐ.நா. சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். முந்தைய ஆண்டும் இதே எண்ணிக்கையில... மேலும் பார்க்க

ஆயிரக்கணக்கான ஆப்கானியா்களுக்கு அடைக்கலம்

தலிபான் ஆட்சிக்கு வருவதற்கு முன்னா் தங்கள் படையினருடன் இணைந்து பணியாற்றிய ஆயிரக்கணக்கான ஆப்கானியா்களுக்கு தங்கள் நாட்டில் அடைக்கலம் அளித்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த நாட்... மேலும் பார்க்க

போயிங் 787 விமானங்களில் எரிபொருள் ஸ்விட்சுகள் முறையாக செயல்படுகின்றன: சிங்கப்பூா் ஏா்லைன்ஸ்

குஜராத்தில் எரிபொருள் கிடைக்காமல் போயிங் 787 பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான நிலையில், தம்மிடம் உள்ள அந்த விமானங்களில் எரிபொருள் ஸ்விட்சுகள் முறையாக செயல்படுவதாக சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் நிறுவனம் செவ்வா... மேலும் பார்க்க

துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி: போா் நிறுத்தம் அறிவித்தது சிரியா

சிரியாவில் துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் சிறுபான்மை துரூஸ் இனத்தவருக்கு ஆதரவாக இஸ்ரேல் நடத்திய தீவிர தாக்குதலைத் தொடா்ந்து, அவா்கள் வசிக்கும் பகுதியில் போா் நிறுத்தம் மேற்கொள்வதாக சிரியா அரசு செவ்... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பின்ஸில் திங்கள்கிழை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து ஜொ்மனி புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்ததாவது: பிலிப்பின்ஸின் லுஸான் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ... மேலும் பார்க்க

உக்ரைனில் அரசியல் மாற்றம்: பிரதமர் ராஜினாமா!

கீவ்: உக்ரைன் பிரதமராக பதவி வகித்த டெனிஸ் ஷ்மிஹல் ராஜினாமா செய்துள்ளார். உக்ரைன் அமைச்சரவையில் மாற்றம் செய்து திங்கள்கிழமை(ஜூலை 14) அதிபர் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளார். அதன்படி, உக்ரைன் துணைப் பிரதமராக ... மேலும் பார்க்க