செய்திகள் :

ஒரே மாதத்தில் 3 பேர் தீக்குளித்து தற்கொலை!

post image

ஒடிஸாவில் ஆண் நண்பர் ஒருவரின் மிரட்டலால், மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிஸா மாநிலத்தின் படபடா கிராமத்தில் மூன்றாமாண்டு மாணவி ஒருவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக அவரது ஆண் நண்பர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும், தொடர்ந்து மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அம்மாணவி நீண்டகாலமாகவே மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், இன்று காலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

காலை 11 மணியளவில் வீட்டுக்கு வந்த அவரின் பெற்றோர், நீண்ட நேரமாக தங்களின் மகள் வெளியே வராததால், சந்தேகமடைந்து அறையின் கதவை அடித்து உடைத்து உள்நுழைந்தனர்.

இந்த நிலையில்தான், தங்களின் மகள் தீக்குளித்து கடுமையான தீக்காயங்களுடன் இறந்து கிடப்பதைக் கண்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒடிஸாவில் கடந்த ஒரு மாதத்திலேயே இது மூன்றாவது தீக்குளிப்பு சம்பவமாகும். ஜூலை 12-ல் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர், தனது துறைத் தலைவர் பாலியல் தொல்லை அளிப்பதாகக் கூறி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். ஜூலை 19-ல் பாலங்காவில் 15 வயது சிறுமி ஒருவரும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

Odisha college student dies by suicide by self-immolation after alleged blackmail by friend

குவஹாத்தி சர்வதேச விமான முனையம் நவம்பரில் திறப்பு!

குவஹாத்தி விமான நிலையத்தின் சர்வதேச முனையம் இந்தாண்டு நவம்பரில் பயணிகளுக்காகத் திறக்கப்படும் என அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.புதிய முனையத்தின் கட்டுமானப் பணிகளைப் புதன்கிழமை ... மேலும் பார்க்க

வங்க மொழி சர்ச்சை: நீண்ட பதாகைகளுடன் போராடிய கால்பந்து ரசிகர்கள்!

தில்லி காவல் துறையின் வங்கதேச மொழி சர்ச்சைக்கு ஈஸ்ட் பெங்கால் கால்பந்து ரசிகர்கள் மிகப்பெரிய பதாகைகளை காண்பித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். மத்திய உள்துறை அமைச்சரவையின்கீழ் இயங்கும் தில்ல... மேலும் பார்க்க

வெளியுறவு கொள்கையின் பேரழிவு! கார்கே

இந்தியா மீதான கூடுதல் வரி விதிக்கப்பட்டிருப்பது வெளியுறவு கொள்கையின் பேரழிவு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெ... மேலும் பார்க்க

திருப்பதி அறக்கட்டளைக்குத் தொழிலதிபர் ரூ.1 கோடி நன்கொடை!

திருமலை திருப்பதியின் எஸ்.வி பிராணதான அறக்கட்டளைக்குத் தொழிலதிபர் ஒருவர் ரூ. 1 கோடி நன்கொடை அளித்துள்ளார். தொழிலதிபரான சிராக் புருஷோத்தம், வருவாய் அமைச்சர் ஏ. சத்ய பிரசாத் உடன் திருமலை திருப்பதி தேவஸ்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனம் விபத்து! இருவர் பலி!

ஜம்மு - காஷ்மீரில் மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் இரண்டு வீரர்கள் பலியாகியுள்ளனர்.ஜம்மு - காஷ்மீர், உதம்பூர் மாவட்டத்தின் கட்வாவில் இருந்து பசந்... மேலும் பார்க்க

மாணவர்களுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய தில்லி முதல்வர்!

தில்லியைப் பாதுகாப்பதும் அதன் முன்னேற்றத்திற்காக உழைப்பது தனது பொறுப்பு என்று முதல்வர் ரேகா குப்தா வியாழக்கிழமை தெரிவித்தார்.ஜன சேவா மையத்தில் நடந்த ரக்ஷா பந்தன் நிகழ்வில் முதல்வர் கலந்துகொண்டார். அங்... மேலும் பார்க்க