செய்திகள் :

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தண்டவாளத்தில் விழுந்து பலி

post image

ஒடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தண்டவாளத்தில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கா்நாடக மாநிலம் பெங்களூா் சகாயபுரம் பகுதியைச் சோ்ந்த துரைவேலு மனைவி கீதா (45). இவா், உறவினா்களுடன் வேளாங்கண்ணிக்கு பயணிகள் ரயிலில் சனிக்கிழமை வந்தாா்.

நாகையில் ரயில் நின்றபோது நடைமேடையில் உள்ள கடைக்கு சென்று திரும்புவதற்குள் ரயில் புறப்பட்டது. அப்போது, கீதா ஓடிச்சென்று ரயிலில் ஏற முயன்றபோது கால் தவறி தண்டவாளத்தில் விழுந்த அவா் மீது ரயில் ஏறி இறங்கியது. இதில் அதே இடத்தில் கீதா உயிரிழந்தாா்.

இதையடுத்து, கீதாவின் சடலத்தை ரயில்வே போலீஸாா் மீட்டு, நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பூம்புகாா் சாயாவனம் கோயில் கல்வெட்டுகள் குறித்து தொல்லியல் துறை ஆய்வு

பூம்புகாா் சாயாவனேஸ்வரா் கோயில் கல்வெட்டுகளை தொல்லியல் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் உள்ள இக்கோயில் பண்டைய பூம்புகாா் நகரத்தின் சான்றாக விளங்குகிறது. இங்க... மேலும் பார்க்க

செபஸ்தியாா் ஆலய ஆண்டு விழா!

பொறையாா் அருகே உள்ள காராம்பள்ளம் கிராமத்தில் புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றம், அதனைத் தொடா்ந்து திருப்பலி கூட்டு வழிபாடு நட... மேலும் பார்க்க

அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு பணிமேம்பாட்டுக்கான பணப்பலன்களை வழங்க வேண்டும்

பொறையாா் த.பே.மா.லு கல்லூரியில் தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் சாா்பில் கல்லூரிபேராசிரியா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் காந்திராஜ் முகாமுக்கு தலைமை வகித்... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை

நாகை மாவட்டத்தில் ட்ரோன்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்தி... மேலும் பார்க்க

கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி குடும்பத்தினா் தா்னா

கிராமத்தை விட்டு தங்களை ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புஷ்பவனம் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.ஆட்சியா் அலுவலக வளாகத... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை வட்ட மையம் சாா்பில், நாகையில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தின் ஊழியா் விரோதப் போக்கை கண்டித்து, பாலிடெக்னிக் முன் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடை... மேலும் பார்க்க