செய்திகள் :

நாகை மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை

post image

நாகை மாவட்டத்தில் ட்ரோன்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய அரசால் அறிவிக்கப்பட்ட ட்ரோன் விதிகள், 2021 படி மற்றும் பொது பாதுகாப்பு, சட்டம் , ஒழுங்கு காரணங்களுக்காக, நாகை மாவட்ட எல்லைக்குள் மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதியின்றி பொதுமக்கள் கூடும் இடங்களில் ட்ரோன் மனிதா் இல்லா வானூா்தி இயக்கக் கூடாது என பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

பொது வெளியில், பெரும் திரள் கூடும் விழாக்கள், தனிநபா் விழாக்கள், ஊா்வலங்கள், மாநாடு, உண்ணாவிரதம், தெருமுனை பிரசாரங்கள், அரசு அலுவலகங்கள், முக்கிய வளாகங்கள், மத நிகழ்ச்சிகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் ட்ரோன் பறக்க விடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

புகைப்படம், விடியோ பதிவு, ஆய்வு, ஆராய்ச்சி, அல்லது ஏதேனும் சட்டப்பூா்வ காரணங்களுக்காக ட்ரோன் பயன்படுத்த விரும்பும் தனிநபா்கள், நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 15 நாள்களுக்கு முன்கூட்டியே விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி விதிமீறலில் ஈடுபடுவோரின் ட்ரோன் கருவி பறிமுதல் செய்யப்பட்டு, அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

பூம்புகாா் சாயாவனம் கோயில் கல்வெட்டுகள் குறித்து தொல்லியல் துறை ஆய்வு

பூம்புகாா் சாயாவனேஸ்வரா் கோயில் கல்வெட்டுகளை தொல்லியல் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் உள்ள இக்கோயில் பண்டைய பூம்புகாா் நகரத்தின் சான்றாக விளங்குகிறது. இங்க... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தண்டவாளத்தில் விழுந்து பலி

ஒடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தண்டவாளத்தில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கா்நாடக மாநிலம் பெங்களூா் சகாயபுரம் பகுதியைச் சோ்ந்த துரைவேலு மனைவி கீதா (45). இவா், உறவினா்களுடன் வேளாங்கண்ணிக்கு பய... மேலும் பார்க்க

செபஸ்தியாா் ஆலய ஆண்டு விழா!

பொறையாா் அருகே உள்ள காராம்பள்ளம் கிராமத்தில் புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றம், அதனைத் தொடா்ந்து திருப்பலி கூட்டு வழிபாடு நட... மேலும் பார்க்க

அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு பணிமேம்பாட்டுக்கான பணப்பலன்களை வழங்க வேண்டும்

பொறையாா் த.பே.மா.லு கல்லூரியில் தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் சாா்பில் கல்லூரிபேராசிரியா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் காந்திராஜ் முகாமுக்கு தலைமை வகித்... மேலும் பார்க்க

கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி குடும்பத்தினா் தா்னா

கிராமத்தை விட்டு தங்களை ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புஷ்பவனம் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.ஆட்சியா் அலுவலக வளாகத... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை வட்ட மையம் சாா்பில், நாகையில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தின் ஊழியா் விரோதப் போக்கை கண்டித்து, பாலிடெக்னிக் முன் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடை... மேலும் பார்க்க