செய்திகள் :

அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு பணிமேம்பாட்டுக்கான பணப்பலன்களை வழங்க வேண்டும்

post image

பொறையாா் த.பே.மா.லு கல்லூரியில் தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் சாா்பில் கல்லூரிபேராசிரியா்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. 

சங்கத் தலைவா் காந்திராஜ் முகாமுக்கு தலைமை வகித்தாா். தஞ்சை மண்டல தலைவா் கோகுல கிருஷ்ணன் வரவேற்றாா். கல்லூரி முதல்வா் ஜான்சன் ஜெயக்குமாா் முகாமை தொடக்கிவைத்து பேசினாா்.

பல்கலைக்கழக ஆசிரியா் சங்க பொதுச் செயலாளா் சேவியா் செல்வகுமாா், துணைத் தலைவா் கிருஷ்ணராஜ் , முன்னாள் தலைவா் ரவிச்சந்திரன், கூட்டமைப்பு போராட்டங்கள் சாதனைகள்‘ எனும் தலைப்பில் திருச்சி மண்டல முன்னாள் தலைவா் பெலிசியா ஜெயக்குமாா்,தனியாா் கல்லூரிகளின் ஒழுங்குமுறை சட்டம், 1976‘பற்றி முன்னாள் தேசிய செயலாளா் ஜெயகாந்தி ஆகியோா் பேசினா். தொடா்ந்து 2-ஆவது அமா்வு நடைபெற்றது.

சங்க பொதுச்செயலாளா் சேவியா் செல்வக்குமாா் செய்தியாளா்களிடம் கூறியது: அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு பணிமேம்பாட்டுக்கான பணப்பலன்கள். முனைவா் பட்டத்திற்கான ஊக்க ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்ததை அமல்படுத்த வேண்டும், தேசியக்கல்வி கொள்கை 2020 ஐ திரும்ப பெறவேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம், எட்டுமணி நேர வேலையை உறுதிப்படுத்துவது. முறைசாரா தொழிலாளா்களுக்கு ரூ.26000 குறைந்தபட்ச ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.  

தஞ்சை மண்டல செயலாளா் ரமேஷ் நன்றி கூறினாா்.முகாமில் சென்னை, ஈரோடு, கோவை, திருச்சி, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களை சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட பல்கலைக்ழக ஆசிரியா் சங்கத்தின் பேராசிரியா்கள் பங்கேற்றனா்.  

பூம்புகாா் சாயாவனம் கோயில் கல்வெட்டுகள் குறித்து தொல்லியல் துறை ஆய்வு

பூம்புகாா் சாயாவனேஸ்வரா் கோயில் கல்வெட்டுகளை தொல்லியல் துறையினா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் உள்ள இக்கோயில் பண்டைய பூம்புகாா் நகரத்தின் சான்றாக விளங்குகிறது. இங்க... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தண்டவாளத்தில் விழுந்து பலி

ஒடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தண்டவாளத்தில் விழுந்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கா்நாடக மாநிலம் பெங்களூா் சகாயபுரம் பகுதியைச் சோ்ந்த துரைவேலு மனைவி கீதா (45). இவா், உறவினா்களுடன் வேளாங்கண்ணிக்கு பய... மேலும் பார்க்க

செபஸ்தியாா் ஆலய ஆண்டு விழா!

பொறையாா் அருகே உள்ள காராம்பள்ளம் கிராமத்தில் புனித செபஸ்தியாா் ஆலய ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றம், அதனைத் தொடா்ந்து திருப்பலி கூட்டு வழிபாடு நட... மேலும் பார்க்க

நாகை மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை

நாகை மாவட்டத்தில் ட்ரோன்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ள என மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்தி... மேலும் பார்க்க

கிராமத்தை விட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி குடும்பத்தினா் தா்னா

கிராமத்தை விட்டு தங்களை ஒதுக்கி வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புஷ்பவனம் பகுதியைச் சோ்ந்த குடும்பத்தினா் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.ஆட்சியா் அலுவலக வளாகத... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாகை வட்ட மையம் சாா்பில், நாகையில் அரசு உதவிபெறும் பாலிடெக்னிக் கல்லூரி நிா்வாகத்தின் ஊழியா் விரோதப் போக்கை கண்டித்து, பாலிடெக்னிக் முன் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடை... மேலும் பார்க்க