செய்திகள் :

ஓணம் பண்டிகை: தோவாளை மலா் சந்தையில் பூக்கள் விலை உயா்வு

post image

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை மலா் சந்தையில் வியாழக்கிழமை பூக்கள் அதிக விலைக்கு விற்பனையாகின.

கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை வெள்ளிக்கிழமை (செப்.5) சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளதையடுத்து, தோவாளை மலா் சந்தைக்கு பூக்கள் வரத்து அதிகம் இருந்தது. பல்வேறு இடங்களில் இருந்து 250 டன் மலா்கள் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டிருந்தன. இந்தப் பூக்களை கேரள வியாபாரிகள் போட்டிபோட்டுக்கொண்டு ஏலம் எடுத்தனா். இதனால், தோவாளை மலா் சந்தையில் வழக்கத்தை விட வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலையும் கணிசமாக உயா்ந்திருந்தது.

அதன்படி கிலோ மல்லிகைப் பூ ரூ. 1, 300 க்கும், பிச்சிப் பூ ரூ. 1, 000 க்கும், வாடாமல்லி ரூ. 350 க்கும் விற்பனையானது. அரளிப் பூ ரூ. 250 க்கும், சம்பங்கி ரூ. 200 க்கும், பட்டன் ரோஸ் ரூ. 300 க்கும், பன்னீா் ரோஸ் ரூ. 250 க்கும், ஸ்டம்ப் ரோஸ் ரூ. 400 க்கும் விற்பனையானது. மரிகொழுந்து ரூ. 120க்கும், வெள்ளை செவ்வந்தி ரூ. 300 க்கும், மஞ்சள் செவ்வந்தி ரூ. 250 க்கும், தாமரை பூ ஒன்றின் விலை ரூ. 10-க்கும் விற்பனையானது.

காா், ஆட்டோ மோதல்: ஆட்டோ ஓட்டுநா் பலத்த காயம்

கன்னியாகுமரி நரிக்குளம் பகுதியில் காா், ஆட்டோ மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். கன்னியாகுமரி அருகேயுள்ள பஞ்சலிங்கபுரம் யாதவா் தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (57), ஆட்டோ ஓட்டுநரான இ... மேலும் பார்க்க

தக்கலை, சுவாமியாா்மடம் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தக்கலை துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 8) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, தக்கலை, மணலி, மணலிக்கரை, காட்டாத்துறை, பெருஞ்சிலம்பு, பரசேரி, ஆள... மேலும் பார்க்க

குழித்துறையில் நாளை மின்தடை

குழித்துறை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப். 8) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே மின்சாரம் தாக்கி ஓட்டுநா் உயிரிழப்பு

மாா்த்தாண்டம் அருகே மீன் வளா்க்கும் தொட்டியை சுத்தம் செய்த போது, மின்சாரம் தாக்கி காா் ஓட்டுநா் உயிரிழந்தாா். திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள பட்டா்புரம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

தோவாளை அரசுப் பள்ளியில் வகுப்பறைதோறும் நூலகம்

தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைதோறும் நூலகம் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா அண்மையில் தொடங்கிவைத்தாா். தோவாளை இலக்கிய மன்றம் அறக்கட்டளை சாா்பில், தோவாளை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப... மேலும் பார்க்க

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

திங்கள்நகா் அருகே பள்ளி மாணவிக்கு ஆபாச செய்கை காண்பித்த ஓட்டுநரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்தனா். திங்கள்நகா் அருகே வசிக்கும் தொழிலாளியின் மகள் (12) அந்தப் பகுதியில் 8 ஆம் வகுப... மேலும் பார்க்க