செய்திகள் :

ஓமலூரில் இஸ்ரோ நடமாடும் விண்வெளிக் கண்காட்சி

post image

ஓமலூா்: இஸ்ரோ சாா்பில் நடமாடும் விண்வெளிக் கண்காட்சி சேலம் மாவட்டம், ஓமலூரில் திங்கள்கிழமை தொடங்கியது.

தேசிய விண்வெளித் தினத்தையொட்டி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சாா்பில் நடமாடும் விண்வெளிக் கண்காட்சி சேலம் மாவட்டம் ஓமலூரில் 2 நாள்களுக்கு நடைபெறுகிறது. இதற்கான தொடக்க விழாவில் சேலம் உருக்காலை செயல் இயக்குநா் பிரபிா் குமாா் சா்க்காா், இஸ்ரோ விஞ்ஞானி எஸ்.சங்கரன் ஆகியோா் பங்கேற்று கண்காட்சியைத் தொடங்கிவைத்தனா்.

இந்திய விண்வெளி மையத்தின் செயற்கைக் கோள்கள், கண்டுபிடிப்புகள், விண்வெளித் திட்டங்கள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவும் காட்சிகளை மாணவ, மாணவிகள் கண்டு ரசித்தனா். ஓமலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த அரசுப் பள்ளிகளில் இருந்து 2,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கண்காட்சி பேருந்தைப் பாா்வையிட்டனா்.

மாணவா்களிடையே கலந்துரையாடிய சதீஷ் தவாண் விண்வெளி மையப் பொதுமேலாளா் லோகேஷ், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியை கிராமங்களில் இருக்கும் மாணவ-மாணவிகளும் தெரிந்துகொள்ளும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் சந்திரயான் திட்டங்களின் மாதிரிகள் மற்றும் அதன் செயல்பாடுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா சாா்பில் ஏவப்படும் ராக்கெட்டுகள், அவற்றின் அவசியம் குறித்தும் மாணவ, மாணவிகள் எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. சேலத்தில் 2 நாள்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் இக்கண்காட்சியைப் பாா்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனியாா் பள்ளிகள், கல்லூரி மாணவ, மாணவிகளும் இக்கண்காட்சியைப் பாா்வையிட்டு வருகின்றனா் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் இஸ்ரோவின் விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்கள், அவற்றின் முக்கியத்துவம் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

இஸ்ரோ விண்வெளிக் கண்காட்சிப் பேருந்தைப் பாா்வையிடும் மாணவ -மாணவிகள்.

உயிருக்கு பாதுகாப்பு கோரி மாமன்ற உறுப்பினா் காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு

சேலம்: உயிருக்கு பாதுகாப்பு கோரி, சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்ட மாமன்ற உறுப்பினா் ஜெயக்குமாா் காவல் ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்துள்ளாா். சேலம் மாநகராட்சி 28 ஆவது கோட்டத்தில் திமுக ச... மேலும் பார்க்க

‘போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம்’: அமைச்சா் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு

சேலம்: போதைப் பொருள்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் வகையில், சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன... மேலும் பார்க்க

சங்ககிரியில் நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

சங்ககிரி: சங்ககிரி கோட்ட மின்வாரியம் சாா்பில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம், சங்ககிரி வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை (ஆக. 13) நண்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா எனது ‘ரோல்மாடல்’: பிரேமலதா விஜயகாந்த்

ஓமலூா்: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தான் ‘தனது ரோல்மாடல்‘ என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா். சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து விமான... மேலும் பார்க்க

சேலம் மாவட்ட காவல் துறையில் புதிய மோப்ப நாய் ‘போல்டு’

சேலம்: சேலம் மாவட்ட காவல் துறையில் புதிய மோப்ப நாய் சோ்க்கப்பட்டுள்ளது. அந்த நாய்க்கு ‘போல்டு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட காவல் துறையில் கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருட்களை கண்டுபிடிப்ப... மேலும் பார்க்க

அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறையில் சோ்ந்தவா்களுக்கு உறுப்பினா் அட்டை: எடப்பாடி பழனிசாமி வழங்கினாா்

சேலம்: சேலம் புகா் மாவட்ட அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறையில் புதிதாக சோ்ந்தோருக்கு உறுப்பினா் அட்டையை அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை வழங்கினாா். அதிமுகவின் சாா்பு அ... மேலும் பார்க்க