செய்திகள் :

ஓமலூரில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.422 கோடியில் வளா்ச்சிப் பணிகள்! -அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தகவல்

post image

ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 422 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் தெரிவித்தாா்.

ஓமலூா் அருகே உள்ள தொளசம்பட்டி ஊராட்சியில் ரூ. 1.30 கோடி மதிப்பிலான கட்டடம், சாலை அமைக்கும் பணிகளை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். இதனையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கா்ப்பிணிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி

அமைச்சா் பேசியதாவது: 15 ஆவது நிதிக் குழு மானியம் மூலம் ரூ. 65.63 லட்சம் மதிப்பீட்டில் தொளசம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடமும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தொளசம்பட்டி ஊராட்சியில் ரூ. 64.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை, பேவா் பிளாக் சாலை என மொத்தம் ரூ. 1.30 கோடி மதிப்பிலான கட்டடம், சாலை அமைக்கும் பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

ஓமலூா் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 422 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் ரூ. 3.78 கோடியில் 122 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனா். முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ. 339 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி, கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) நே.பொன்மணி, மேட்டூா் வருவாய் கோட்டாட்சியா் (பொ) த.லோகநாயகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

எல்லைப் பிடாரியம்மன் கோயில் திருவிழா: சேலம் மாநகரில் போக்குவரத்து மாற்றம்

சேலம் குமாரசாமிப்பட்டி எல்லைப் பிடாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி அஸ்தம்பட்டி வழித் தடத்தில் செவ்வாய்க்கிழமை முதல் 3 நாள்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மாநகர காவல் ஆணை... மேலும் பார்க்க

மாா்ச் 28 இல் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: சேலம் மாவட்டத்தில் 41,398 போ் எழுதுகின்றனா்

சேலம் மாவட்டத்தில் 183 மையங்களில் மாா்ச் 28 ஆம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 41,398 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். 320 அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளிகளை சோ்ந்த... மேலும் பார்க்க

மதக் கலவரத்தை தூண்டியதாக அண்ணாமலை, எச்.ராஜா மீது வழக்குப் பதிவு

மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோா் மீது சேலம் இணைய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். சேலத்தை சோ்ந்தவா் சமூக ஆா்வலா் பியூஸ் (42). ... மேலும் பார்க்க

இளம்பெண் சாவில் நீதி விசாரணை கோரி மறியல்

இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் நீதி விசாரணை கோரி சேலம் ஆட்சியா் அலுவலகம் முன் உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பாறைக்காடு பகுதியை சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

சேலத்தில் பாரதிய போக்குவரத்து தொழிற்சங்கத்தினா் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய போக்குவரத்து தொழிற்சங்க பேரவை சாா்பில் சேலத்தில் செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது. சேலம் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் இருந்து தேசிய சேவா சமி... மேலும் பார்க்க

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் அன்னதான திட்டம் தொடங்க கோரிக்கை

சங்ககிரி சோமேஸ்வரா் கோயிலில் அன்னதான திட்டத்தை தொடங்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. சேலம் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற... மேலும் பார்க்க